Monday, June 29, 2009

போதலின் தனிமை


எல்லைகளைக் கடக்கின்ற பாதங்களில்
குவிந்திருக்கின்றது வழி

தன்னை மீட்க கடந்த தொலைவின்
நிழல் கசிந்த ஒரு நொடியில் ஆனது அனைத்தும்

வரவின் கூடலில் வந்தமரும் குருவிகளிடம்
இருப்பிடம் கேட்க
இறக்கையினை அடிக்கின்றன அவை

பேச்சரவம் அரவத்தினைப் போல
சுருண்டுக் கிடக்க
வார்த்தைகள் வாலாட்ட முனையாமல்
பம்முகின்றன
போகவேண்டிய இடம் குறித்த பிரக்ஞையில்

No comments: