Monday, July 20, 2009


ஒரு வகையில் யாரையும் குற்றம் சொல்ல
இயலா வாழ்வின் போக்கு
அனுமதியின் துணையின்றி வரும்
காற்றின் தன்மை புயலுற்று இருப்பதின் ரகசியம் புரியாமல்
எதிர்படும் நனவோட்டத்தின்மீது
எழுதப்படும் செலவுகள் குறித்த கணக்கை
சரிபார்க்க முடியா தருணத்தின் பூர்வீகத்தில் பூக்கும்
மலர்மீது அமர்வதும்
அல்லது
அம்மலரைப் பறிப்பதும்
பறிக்கப்பட்ட மலரின் வாசத்தை நுகர்தலும்
அனிச்சை செயலானபிறகு
மீன்களைக் கொத்தும் பறவை ஒன்றுக்கு
இறக்கைகளே துடுப்பாகிவிடுவது என்பது
தவிர்க்கவே இயலாததுதான்
எனவே இந்தக் கவிதையை இத்துடன்
முடிப்பதோ அன்றி தொடர்வதோ
கவிதையின் பாடு
எழுதியவனைத் தேடும் எண்ணமற்று இருப்போர்
இதைப் படிக்க கடவர்.

No comments: