தருணத்தின் அமைவு கிட்டாத எதுவும்
இன்மையோடு தொடர்கிறது
வந்ததிலிருந்தே வருகை குறித்த பெருமிதம்
மிகைந்து அழிகிறது துளித்துளியாய்
போகையில் அழிந்த எந்த துவாரமும்
காற்றையோ
நீரையோ
கொண்டு செல்வதில்லை
வருகையில் மிஞ்சும் போவதைக்
குறித்த எந்த பிரக்ஞையுமின்றி
இருக்கின்றோ மெல்லாம் நாம்
Friday, February 19, 2010
Thursday, February 4, 2010
ஏதோ
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdP1aKvGECZDnz_hvDmM4PJltxYvSvbB7F6HWSxgHqlM1Zg8OZtxM0GHoz0h8HYjfxFb1KIff2dtg-4RxyUZMCgnqBWJXr_ZTIn-KKRk37gVLPpYzuuH1-rp0t3igycVG9qBh-d16C9ZI/s320/arta.jpg)
தீர்க்கமானக் கோடுகளால் வரையக்கூடியன
அல்ல அவை
பகடிகளற்ற சொற்கள் உலவும் வனம்
பிசிறுகள் சற்றேனும் இல்லா மேகம்
ஊறிய தேனில் மிதக்கும் மதுரம்
யாருமற்ற வெளியொன்றின் மௌனம்
எல்லாவற்றிலும்
இருக்கும் உன் எஞ்சிய அழகிடை
என்ன இருக்கின்றடு இன்னும்
யாழன் ஆதி
Subscribe to:
Posts (Atom)