Friday, February 19, 2010

தருணம்

தருணத்தின் அமைவு கிட்டாத எதுவும்
இன்மையோடு தொடர்கிறது
வந்ததிலிருந்தே வருகை குறித்த பெருமிதம்
மிகைந்து அழிகிறது துளித்துளியாய்
போகையில் அழிந்த எந்த துவாரமும்
காற்றையோ
நீரையோ
கொண்டு செல்வதில்லை
வருகையில் மிஞ்சும் போவதைக்
குறித்த எந்த பிரக்ஞையுமின்றி
இருக்கின்றோ மெல்லாம் நாம்

Thursday, February 4, 2010

ஏதோ


தீர்க்கமானக் கோடுகளால் வரையக்கூடியன
அல்ல அவை
பகடிகளற்ற சொற்கள் உலவும் வனம்
பிசிறுகள் சற்றேனும் இல்லா மேகம்
ஊறிய தேனில் மிதக்கும் மதுரம்
யாருமற்ற வெளியொன்றின் மௌனம்
எல்லாவற்றிலும்
இருக்கும் உன் எஞ்சிய அழகிடை
என்ன இருக்கின்றடு இன்னும்

யாழன் ஆதி