Thursday, October 29, 2009


அண்மையின் கைகளில் என்னைத் தந்துவிட்டு
செல்கிறது காலம்
அதன் துணிவுகளோடு செல்ல இயலாத என்னை
விட்டுவிட்டு சென்றுவிடுவதாக அச்சுறுத்துகிறது
திராணியற்ற ஒரு போர்ச்சேவகனைப் போல
என் வாளையும் போர் உடைகளையும் நான் களைந்துவிட்டு
காத்திருக்கின்றேன்
எதிரிகளின் தண்டனைகளை தரப்போகும் ஆணைகளுக்காய்
போரற்ற பிராந்தியத்தில் என்னை விடவேண்டும் என்னும்
எண்ணம் இருப்பதாய் சொல்லுகிறார்கள் உளவாளிகள்
ஆனாலும் தாக்குதலுக்கு உள்ளாகாமல் இருக்கவும்
முடியாதென்கிறார்கள்
தாக்குதலற்ற போரும்
இழப்புகளற்ற அன்பும்
காதலிலும் இல்லை கண்மணி கிளாடி

அ.முத்துகிருஷ்ணனுக்குத் திருமணம்


அன்புமிக்க நண்பர் முத்துவுக்குத் திருமணம். 30.10.09 மாலை 6.00 மணியளவில் மதுரையில் நடைபெறுகிறது. தமிழகத்தின் மிக முக்கியமான எழுத்தாளன். கோணங்கியைப் போல பயணம் செய்யக்கூடியவர். மிக எளிமையான மனிதர். நுட்பமான தரவுகளையெல்லாம் எடுத்து கட்டுரைகளை எழுதக்கூடிய திறனுடையோர்.ஆங்கிலப்புலமையும் வடநாட்டில் அவரின் தொடர்பும் அவரின் எழுத்துகளுக்கு மிகவும் பயன் தரத்தக்கன.

முத்துக்கிருஷ்ணனை வாழ்த்துவோம் நண்பர்களே!