Friday, September 19, 2008

குவிமையத்தின் மீது ஒரு ஒளிக்கற்றை


அதற்குமேல் ஒன்றும் சொல்ல முடியாத தவிப்பில் இருக்கிறாள் அவள்। கூழாங்கற்களை உற்பத்தி செய்து கடலில் கடந்துவிடும் நதியைப் போல எதுவும் தொடர்பில்லாது அவள் செல்கிறாள்।அதற்காக அவளை நதி என்றும் நம்மால் சொல்லிவிட முடியாது। ஏனிந்த தயக்கம்? எதற்காக இந்த துயரம்? வாழ்வின் மீது நாம் கொண்டிருக்கிற அர்த்தங்களின் தன்மைகளைக் கேள்விக்கு உடபடுத்த வேண்டியிருக்கிறது। எனினும் அவளின் கூந்தலைப் போல அவள் வாழக்கை சுருண்டுதான் இருக்கிறது। எவ்வளவு நாட்கள் அவளின் தனிமைத்துயரை வெறும் உடைகள் மூடியிருக்கும்?

Sunday, September 7, 2008

வாய்த்தல்


மிகவும் தாமதமான நேரம்
சாத்தியங்களின் கதவுகள் சாத்தப்பட்ட
என் தனிமையின் மீது கவ்வுகிறது
ஒலிகளேதுமற்ற இரவின் கனம்

துயரங்களின் தூரம் குறைந்த என் காலத்தின்மீது
தழுவும் காயங்களில் வழியும் ரத்தத்தை
வழிய விடுகிறேன்।

எனினும்
எனினும்
அகாலத்தின் குரல்களைப் பதிவாக்காமல்
தொலைக்கவேண்டியே இருக்கிறது
இந்த இருட்டென்னும் வேளையை