Saturday, October 18, 2008

கத கேளு..கத கேளு



அந்த வேளையில் எதுவும் என்னால் பேசமுடியவில்லை. பேசவே முடியவில்லை என்னும்போது ஏதாவது எப்படி செய்வது? அவனுக்கும் ஒன்றும் புரியவில்லை.ஏதேதோ எண்ணியிருந்தான் போலும். அவ்வப்போது சுருக்கம் முகத்தில் வந்து வந்து சென்றது. கொஞ்ச நேரம் இருவருமே பேசாமல் இருந்தோம். கைகள் எதையோ நோண்டிக்கொண்டிருந்தன. வானம் அப்பொழுதுதான் மேகங்களைத்திரட்டிக் கொண்டிருந்த்து. அடுத்தக் கட்ட நடவடிக்கைப் பற்றி அறிவிப்பு வராதா என ஏமாந்து நிற்கும் மக்களைப் போல என் கைகளைலிருந்த பேனாக்கள் விழுந்தன. பேனாக்களைப் பற்றிய விவரம் அறிவதற்குள் அதனுள் இருக்கும் மை தீர்ந்துவிட்ட்தாக நினைத்தன பேனாக்கள்.

Sunday, October 5, 2008

ஆழம்

அத்தனையும் உன் மேல் சுமத்தப்பட்டவை
அதன் பாரம் தாளாமல் அழலாம் நீ
அதிகாரத்தின்ஆளுமையின் கைகள் முறுக்கிய உன் கைகளின்குறுத்தெலுகம்புகள் உடையலாம்
கிட
வலிகளின் மேன்மை தங்கிய உன் உடல்
முழுதும்துடிக்க துடிக்க கிட
கொஞ்சமும் சுரணையற்றஅவற்றைவிட
வலிகளூடே வாழும் உன் வாழ்க்கைஉன்னதமானது।