tag:blogger.com,1999:blog-84985492917604661322024-02-18T23:18:59.195-08:00பறைஅன்பின் வழியது உயிர்நிலைபறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-51787193284680952432010-03-24T05:37:00.000-07:002010-03-24T05:42:19.852-07:00பெண்மொழியும் காவலும்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGzE9ZMDyPabYCmpj68_eL5le20rxA0clHN0zXGzC_ZeiLoI58Ndry0ziiPd93WgzAupOTv-Y2YUSU4dzbNM_SG8ykjrykpG6TnG56AOhERjoZv67Uo1UJhaEfgmmSMiwxKoYxoclgePk/s1600/pr+oviyam14.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 385px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGzE9ZMDyPabYCmpj68_eL5le20rxA0clHN0zXGzC_ZeiLoI58Ndry0ziiPd93WgzAupOTv-Y2YUSU4dzbNM_SG8ykjrykpG6TnG56AOhERjoZv67Uo1UJhaEfgmmSMiwxKoYxoclgePk/s400/pr+oviyam14.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5452179399814846530" /></a> <span style="font-style:italic;"> நன்றி : prajan</span><br />இலக்கியப் பிரதிகளை உருவாக்குபவர்கள் கடவுள்கள் அல்ல தவறுகளைச் செய்வதற்கும் அவற்றுக்கான காரணங்களை அடுக்குவதற்கும். தமிழிலக்கியப் பிரதிகளை கவனத்தில் கொள்வோமெனில் இன்னும் மானுடம் மனம் திறந்து பேசக்கூடிய எத்தனையோ செய்திகள அப்படியே இருக்கின்றன. <br /><br />தலித் பிரச்சினைகளை பிரதிகளாக்கிய காலங்களிலும் அது தீவிர உச்சகட்டத்தை அடைந்த நேரத்திலும் தற்போது அது தேவையற்றதென கருதப் படும் காலத்திலும் இன்னும் காத்திரமாக பேசப்பட வேண்டியவை அப்படியேதான் இருக்கின்றன. கதைகளாக்கப் பட வேண்டிய தலித் வாழ்வுகளும் அதன் எதிர்பாராத தீவிரமும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. அதைவிட இன்னும் முக்கியமானது என்னவென்றால் தலித் எழுத்தாளர்களே அதன் தீவிரம் தற்போது தேவையற்றது என்று கூறும் சூழல்தான்.<br /><br />இதே அளவுகோலை வைத்துக்கொண்டுதான் பெண் ஆக்கவாளிகளையும் நோக்க வேண்டியுள்ளது. புதிராக இருக்கின்றாள் பெண் என்னும் அங்கலாயிப்பில் புரியவில்லை பெண் என்று சொல்லி அவர்களைப் பூடகமாக வைத்திருந்த சமூக கோட்பாட்டு அரண்களை யெல்லாம் உடைத்து தன்னை பிரகடனப்படுத்தியது பெண்மொழி எழுத்து. <br /><br />அது அப்படி தன்னை உடைத்துக் கொண்டு வெளிவந்தபோது எல்லாமே தகர்ந்துபோயின. எந்தெந்த உறுப்புகளை மையமாக வைத்து ஆண் ஆக்கங்கள் பெண்ணைப் பார்த்தனவோ அவை திறக்கப்பட்ட பாசறையிலிருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்களாக மாறின. அவை காற்றின் எல்லா திசைகளிலும் கல்ந்து பெரும் வீச்சுடன் நெருங்கின. அதிர்ந்த ஆண் ஆக்கங்கள் அவற்றை எதிர்த்தன. கூக்குரல்கள் எழுப்பின. ஆனால் அவற்றையெல்லாம் மீறி பெண்மொழி காலமாக மாறிவிட்டது. அதனை காலத்திலிருந்து யாரும் பிரிக்கமுடியாது.<br /><br />ஆனால் லீனா மணிமேகலை என்னும் கவிஞரின் கவிதைகள் ஆபாசமாக இருக்கின்றன என்று இந்துத்துவ இயக்கங்கள் காவல் துறையிடம் புகார் கொடுத்திருக்கின்றது என்று ஒரு செய்தி அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி உண்மையாக இருக்கும் பாட்சத்தில் அதில் என்னவிதமான நியாயம் இருக்கின்றது என்று தெரியவில்லை. அதுவும் அது குறித்து கேள்விகள் கேட்கும் தாத்பரியங்கள் எதுவும் இந்துத்துவ அமைப்புகளுக்கு இல்லை. <br /><br />இந்துக் கோவில்களில் உள்ள ஆபாசமான சிலைகள். இந்துக்கடவுளர்களின் ஆபாச புராணங்கள் இதெல்லாம் எப்படி நியாயப்படுத்தப்படுபவனாக இருக்கக் கூடும்.<br />எழுத்து என்பது அவருடைய உரிமை. அவரின் துன்பங்களை அவஸ்தைகளை எழுச்சியை எழுதுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. அப்படி இருக்கும்போது அது ஆபாசம் ஆபாசமில்லை நியாயத்தீர்ப்பு வழங்க யாருக்கும் உரிமை இல்லை.<br />எழுத்துதான் சமூகத்தை மாற்றி இருக்கின்றது. அதனால்தான் இந்துத்துவ இயக்கங்கள் இதை தூக்கிப் பிடிக்கின்றன. தீட்டு என ஒதுக்கி வைத்தவைகள் எல்லாம் பாடுபொருளாக மாறிவிட்டன. தடைகளைத் தகர்க்கின்றன. சமூகத்தினை கட்டுடைக்கின்றன. அதனால் தாங்கல் அமைத்துவைத்துள்ள சாதிய அடுக்குகள் சரிந்துவிடுகின்றன அதனால் தங்களின் வியாபாரம் நடக்கவில்லை என்பதுதான் அவர்களைன் இந்த எரிச்சலுக்குக் காரணம். கவலைப் படாதீர்கள் மதவாதிகளே நீங்கள் நினைக்கின்ற எதுவும் இங்கு நடக்காது. தீட்டு என்று நீங்கள் ஒதுக்கிவைத்தவர்கள் எல்லாம் எழுத்தை ஆயுதமாகத் தூக்கிவருகிறார்கள். உருட்டப்பட்ட உத்ராட்சைகளில் உலகை ஆளாலாம் என்ற கனவினை விட்டுவிடுங்கள் தீட்டுத்துணியென நீங்கள் சொன்ன அதுதான் புத்தகங்களாகவும் விடுதலைக்கான கருவியாகவும் பயன்பட வருகின்றன. ஒட்டுமொத்த விடுதலைக்காக பீ வாரிய கரண்டியும் கூடையும் செருப்புத்தைத்த ஊசிகளும் பேனாக்களாகிப் பேசுகின்றன. சேரிகள் பாசறைகளாகின்றன. பாடங்கள் ஊட்டப்படும்பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-9601464133334192942010-03-10T17:59:00.000-08:002010-03-10T18:41:53.376-08:00<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidi_3GjdteCdXJzNbCcojUSZIiSbPsVthz-2vRdr6wAiZFO_pNU-SzgPhXmnfB8QF_RLmSkO0Xjn4UChDXkrgX2d6nURgmMIItUUxcOekilimuaN9Per5uWljZ1dMqjF9VoS7GTHlp39o/s1600-h/Copy+of+pr+oviyam8.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 233px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidi_3GjdteCdXJzNbCcojUSZIiSbPsVthz-2vRdr6wAiZFO_pNU-SzgPhXmnfB8QF_RLmSkO0Xjn4UChDXkrgX2d6nURgmMIItUUxcOekilimuaN9Per5uWljZ1dMqjF9VoS7GTHlp39o/s320/Copy+of+pr+oviyam8.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5447200913335371970" /></a><br />அப்படி இன்னும் தெரியவில்லை யாருக்கும்<br />கடந்தவைகளின்மீதும் <br />நிகழ்பவைகளின்மீதும்<br />வினையாற்றும் விவரம்<br />கருமையின் இருப்பாயிருக்கும் <br />காலமேகம் பொழியும் மழையின் துயரம்<br />வேர்களை வேட்டையாடும் பொழுது எதுவாயினும்<br />அதில் நிகழும் மாற்றத்தின் குடியமர்ந்து<br />வாழும் குயிலின் பாடலைப் போல<br />அமைந்திருக்கும் வாழ்வுபறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-58048290218891728232010-03-02T18:31:00.000-08:002010-03-02T18:35:33.739-08:00தலித் பெண்ணெழுத்து: அடைய வேண்டிய பொன் இடம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEig8gDtPrKnpNNJzyuuZzfYIbcEmvB2AtepFKhzZzu0C9aFIGDFIsVCNdCiXd0rIOmWcrAvz54_NkUXLK6YV9xeBjsmZvdjz8ntdNsbkpL8vJ8ItWGcjewSaUyJx5ZY5l6VSAde_XOeUys/s1600-h/Arpana-Caur.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 164px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEig8gDtPrKnpNNJzyuuZzfYIbcEmvB2AtepFKhzZzu0C9aFIGDFIsVCNdCiXd0rIOmWcrAvz54_NkUXLK6YV9xeBjsmZvdjz8ntdNsbkpL8vJ8ItWGcjewSaUyJx5ZY5l6VSAde_XOeUys/s320/Arpana-Caur.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5444230560292382834" /></a><br /><br />(விளாத்திகுளத்திலிருந்து வெளிவரும் கரிசல்கதிர் என்னும் இதழில் வெளியானது)<br /><br />தமிழ் இலக்கிய வரைவினில் இன்றைக்கு பெண் எழுத்து முக்கியமான இடத்தை அடைந்திருக்கின்றது.சங்க இலக்கியத்திலேயே தமிழில் பெண் ஆக்கவாளிகள் மிகவும் சிறப்பாகவும் தங்களைன் எண்ணங்களை எந்தவிதமான தயக்கமுமின்றி கூறும் தன்மையுடன் இருந்திருக்கின்றனர். வெண்ணிக்குயத்தியார் என்னும் பெண்பால் புலவர் தன் காதலனைக்குறித்து பாடுவதும் அவனைத்தேடி செல்லுதலும் தமிழரின் வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றன. பௌத்த சமண சமயங்களின் பரவலால் வேறுபாடுகளற்றதாய் தமிழ்ச்சமூகம் இருந்தது. அதனால்தான் தற்கொல்லியை முற்கொன்ற குண்டலகேசி கதைகள் எழுதப்பட்டன.சமய இலக்கியக் காலங்களில் ஆண்டாளின் கவிதைகள் அவருடைய கடவுள்சார்ந்த கருத்துக்களை விட்டுவிட்டு பார்க்கின்றபோது அற்புதமான கவிதைகள். கவிதைக்கான தொழில்நுட்பத்துடன் இயங்கக் கூடியன அவை.<br /><br />அதற்குப்பிறகு தமிழிலக்கிய வெளியில் பெண் எழுத்துக்கான தேக்கம் மிக நீண்டகாலமாகவே இருந்தது என்பது மறுக்கவொண்ணாதது.எங்காவது ஒருவர் எப்போதாவது ஒருவர் எழுதியிருப்பார். ஆனால் அவருடைய ஆக்கங்கள் அத்தனையளவு பேசப்பட்டிருக்குமா என்றால் இல்லை. காதலா கடமையா என்னும் நாவலை எழுதிய சித்தி ஜுனைதா பேகம் இபோதுதான் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றார். இந்தக் காலக்கட்டத்தில் கவிதையில் பெண் நிலை என்பது மிகவும் மோசமாகவே இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்க்கவிதை இரு நதிகளாய் கிளைவிட்டு நகர்ந்தபோதும் எந்த நதியிலும் பெண்ணெழுத்துக்கான தடம் பதியப்படவில்லை. வானம்பாடிகளானாலும் நவீன கவிதைகளை உருவாக்கியவர்களானாலும் பெண்களை முன்னிலைப்படுத்தவில்லை. அவரவர் ஆக்கங்களில் வேண்டுமானாலும் பெண்கள் குறித்த சித்திரங்களை எழுதினார்களே ஒழிய பெண் எழுதும் தளம் என்பது உருவாகவில்லை.<br /><br />அதற்குப் பல காரணங்களை நம்மால் பட்டியல் போடமுடியும்.பெண்கல்வி என்பது மிகவும்குறைவாக இருந்தது. விடுதலை அடைந்த ஆண்டில் ஆயிரம் பெண்களில் ஆறு பெண்கள்தான் படித்திருந்தார்கள் என்றெல்லாம் புறக்காரணிகளை அடுக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம்விட மிக முக்கியமானது எழுத்து ஆதிக்கக் காரர்களிடமிருந்தது. அது அவர்கள் வீட்டுப்பரணில் பதுங்கியிருக்கும் பூனையைப்போலத் தான் பதுங்கியிருந்தது. இந்திய ஆதிக்கம் என்பது இந்து ஆதிக்கம் தானே. தமிழர்களும் இடைக்காலத்தில் பௌத்த வீழ்ச்சிக்குப் பிறகு காவிமயமாதல் நிகழ்ந்து தமிழகமும் தன்னிலை மறந்த சுடுகாடாக இந்துத்துவ சிந்தனை வெளியில் இருந்தது<br /><br />அந்தக்காலக்கட்டங்களி தோன்றிய எழுத்து வகைகள் ஆதிக்கவெறி பிடித்தவர்களின் வாழ்வையும் அவர்களின் மொழியும்தான் பதிவாகின.இந்த நிலையில் பொதுவரங்கில் எழுதவந்த பெண்கள் தமிழ்ச்சூழலில் கதைகள் எழுதினார்கள். அதில் அவர்கள் பெண்களை விடுதலைக்கானவர்களாகக் கருதாமல் அவர்களை மற்ற ஆண் எழுத்தாளர்கள் எழுதுவதைபோலவே எழுதினார்கள் என்பதும் கண்கூடு.<br /><br /><br />தொன்னூறுகளில் தலித் எழுத்து தமிழில் தீவிரமடைகிறபோதுதான் பெண்ணெழுத்தும் தீவிரமடைகின்றது. எப்படி அரசியல்தளத்திலு சமூகத்தளத்திலும் தலித் விடுதலையும் பெண்விடுதலையும் ஒருசேரப் பார்க்கப்படுகின்றதோ அதைப் போலத்தான் இலக்கியத்திலும் பார்க்கப்பட வேண்டும். ஆதிக்கப் புலத்திருந்து கல்வியும் வாசிப்பும் பெண்களுக்கும் தலித்துகளுக்கும் கிடைத்தபோதுதான் அவர்கள் அவர்களுக்கான எழுத்தினை உருவாக்கினார்கள். அந்த எழுத்தின் காத்திரமும் அதன் தேவையும் இன்று சமூகத்தளத்தின் போதாமைகளை எடுத்துப் பேசுகின்றன. தலித் எழுத்தாளர்கள் தொட்ட பிரச்சினைகள் வாழ்வியல் விழுமியங்களாக இருந்து பின்னால் அவை அரசியல் முழக்கங்களாக மாறி அரசின் திட்டங்களாக அவை உருவாகின்றன. இத்தகைய குறைந்தபட்ச சமூக மாற்றத்தையாவது இவ்வகையான எழுத்துக்கள் கொணர்ந்திருக்கின்றன.<br /><br />இச்சூழலில் பெண்ணெழுத்தின் இன்றைய நிலை யாது என்னும் கேள்வி எழுகிறது. மனுவின் கூற்றுப்படி பெண் பார்ப்பனக் குலத்தில் பிறந்திருந்தாலும் சூத்திரருக்குரிய ஒடுக்குதலுக்கு உள்ளாகிறவளாக இருக்கிறாள். அதனால் பொதுப் பெண்ணியம் எனபதும் அதைச் சார்ந்து இயங்கக் கூடிய இலக்கியத்தளம் மட்டுமே போதும் என்பதையும் தாண்டி தலித் பெண்ணியம் பேசப்படுகிறது. பொதுவான பெண்ணிலக்கியம் தலித் பெண்ணின் விடுதலையைச் சாத்தியப்படுத்துகிறதா? பல பொதுப் பெண்ணிய எழுத்தாளர்கள் மேல்தட்டு மனோபாவதோடு மட்டுமே இயங்குகிறார்கள் என்பதும் கண்கூடு.<br /><br />தலித் பெண்ணெழுத்து என்பது பொதுப்பெண்ணியத்திலிருந்து எந்தப் புள்ளியில் வேறுபடுகிறது எப்படி அதன் இயக்கம் இருக்கும் என்பது குறித்த பிரக்ஞை ஏதுமற்று சாதி ஒடுக்குமுறைகளையும் அதனால் ஏற்பட்டு துயரவெளிகளையும் ஆக்கங்களாக மாற்றிவிடுவது மட்டுமே ஆகாது. மாறாக பெண் அடக்குமுறைக்கு உள்ளான காலத்தின் சூழ்ச்சிக்குறித்தும் அதன் கூரிய அம்பாகவும் ஆயுதமாகவும் இருக்கின்ற மதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் தலித் பெண்ணெழுத்தும் சாத்தியமற்றுதான் போய்விடும்.<br /><br />தலித் எழுத்துக்கான தேவை நிறைவடைந்துவிட்டதாகவும் அது தேங்கிவிட்டதாகவும் கூறுபவர்கள் தலித்திய சிந்தனையின் ஆழத்திலிருந்து புறப்படாதவர்கள். அதேபோல்தான் தலித் பெண்ணெழுத்தும். பெண்ணிய எல்லாவாத அடிமைத்தனத்திற்கும் காரணமாய் இருப்பது ஒன்றுதான் அதுதான் இந்து மதம். தீட்டு என்னும் சொல்லைப் பயன்படுத்தி தன் குடும்பத்தில் உள்ள பெண்களையே வீட்டிற்கு வெளியே வைத்ததுதான் இந்து ஆதிக்க மரபு.இதையே சமூகத்திற்குப் பொருத்தினால் சேரி. உழைக்கின்ற பெண்களை அவர்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களின் உடல் உபாதைகளைப் பற்றிய அக்கறை ஏதுமின்றி புறந்தள்ளிஅவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் மறுத்து ஆணை குடும்பத்தை சார்ந்து வாழ்வதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்டது என்று சொல்லி பெண் என்னும் உயிரை ஒரு பொருளாகக் கூட மதிக்காததுதான் இந்துத்துவம்.<br /><br />தலித்துகளும் பெண்களும் இந்துத்துவ ஆதிக்கத்தினால் சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் துரத்தப்பட்டவர்கள் என்றாகின்றனர். சமூகம் இந்த இந்துத்தத்துவத்தினால் ஜனநாயகமற்றதாய் மாறிவிட்டது. இதைக் கருத்துருவாகக்கொண்டு இந்துமத வெளியேற்றமே சமூக விடுதலை என்றாய்ந்து அதை நிலைநிறுத்த நாக்பூரில் அய்ந்து லட்சம் மக்களோடு புத்த மதத்திற்கு மாறினார் புரட்சியாளர் அம்பேத்கர். இந்துவாகப் பிறந்தேன் அது ஒரு விபத்து; ஆனால் கண்டிப்பாக இந்துவாகச் சாக மாட்டேன் என்று சொல்லி ஏறக்குறைய முப்பது ஆண்டுகால தீவிர தேடலுக்குப் பிறகு பவுத்தம்தான் மானுட விடுதலைக்கு சரியான வழி என்று பிரகடனம் செய்து அதை நிறைவேற்றினார் புரட்சியாளர்.<br /><br />இந்தப் புள்ளியிலிருந்துதான் பெண்ணெழுத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்துத்துவம்தான் பெண்ணை மனிதப் பிறப்பிலிருந்து கழித்து வைத்தது. பெண்களை இனப்பெருக்கம் செய்வதற்கும் வயல்வெளிகளில் மாடுகளைப் பயன்படுத்துவதைப்போல வீட்டில் வேலைகளை குறிப்பாக ஆணுக்கான வேலைகளைச் செய்வதற்கும் நிர்பந்தப்படுத்தியது. அவர்களின் உடலைவைத்தே அவர்களைப் புறந்தள்ளியோ அல்லது வன்புணர்வு செய்தோ அல்லது அதைக் கொண்டாடி தன்னின்பத்திற்குப் பயன்படுத்திக்கொண்டது. அந்த உடலைப் பயன்படுத்திதான் இன்றைய நவீன பெண்கவிஞர்கள் ஆண் சமூகத்திற்கு எதிராக எழுத ஆரம்பித்தார்கள்<br /><br />மயிர்கள் சிரைக்கப்படாத என் நிர்வாணம்<br />அழிக்கப்படாத காடுகளைப்போல்<br />கம்பீரம் வீசுகிறது<br /><br />என்று சுகிர்தராணியால் எழுதமுடிகிறது என்றால் அதை பாலியல் கவிதை என்று சொல்லிவிட முடியாது. மறுக்கப்பட்ட யோனிகளையும் முலைகளையும் பதாகைகளாக உயர்த்துவது என்னும் கருத்தியலின் மூலம் அது. ஆனால் இத்தகைய கவிதைகளை ஆண் அறிஞர்கள் பாலியல் கவிதைகள் என்று வகைமைப்படுத்துகிறார்கள். இத்தகைய கவிதைகள் பாலியல் கவிதைகள் அல்ல அவற்றை பெண்மொழிக் கவிதைகள் என்றும் கூட நாம் அழைக்கலாம். ஆணியத்திற்கு எதிராக இந்தக் கவிதைகள் மாறியிருக்கின்றன. அதுவும் நல்லதுதான். ஆனால் வெறுமனே ஆணியம் அல்லது லிங்கமைய வாதம் என்பது பொதுப் பெண்ணியம். அதில் தலித் பெண்ணியத்திற்கான நுண்ணரசியலைக் கட்டக்கூடிய இடம் இல்லாமலே இருக்கின்றது. சமூக அரசியலில் சமத்தன்மை வருவதற்குப் புரட்சியாளர் அம்பேதகர் சொன்ன இந்துக்களிடமிருந்து விடுதலை என்னும் தத்துவத்தைத்தான் நாம் இங்கே பொருத்த வேண்டும். ஆணியம் என்பது இந்துத்துவத்தின் ஓர் ஏற்பாடு. <br /><br />ஆக, பெண்ணெழுத்து எதை மோதி உடைக்க வேண்டும் என்றால் இந்துத்துவத்தை. அதன் கூறாக இருக்கின்ற இந்துமதத்தை. அதன் முகமூடியாக இருக்கின்ற இந்துத்துவ பயங்கரவாத அரசியலை. அதன் இயங்குதளமாக இருக்கின்ற இந்துப் பண்பாட்டு முதல்வாதத்தை. என்ன நடக்கிறது உண்மையிலே என்று பார்த்தால் பொதுவான பெண் ஆக்கவாளிகள் யாரும் தங்களுடைய இந்து அடையாளத்தை துறந்தாரில்லை. அகில இந்திய அளவில் அரசியலில் இந்து அரசியலுக்கு எதிராகப் பார்க்கப்படுகின்ற பிருந்தா காரத் கூட இந்து அடையாளமாகிய பெரிய பொட்டோடுதான் காட்சி தருகிறார்கள். இந்துத்துவம் சொன்ன பெண் அடையாளங்கள் அனைத்தும் பெண் ஆக்கவாளிகளிடத்தில் இருக்கின்றன. புற அடையாளங்களான உடைகளில் மாற்றங்கள் இருக்கின்றன. இது இப்போது எந்தவிதமான சமூக அக்கறையுமின்றி குடும்ப அடிமைகளாக இருக்கின்ற பெண்கள்கூட அழகியலை முன்னிருத்தி இத்தகைய புற அடையாள மாற்றங்களோடுதான் இருக்கின்றார்கள்.<br /><br />சமூக முன்னனியினராக இருக்கக்கூடிய பெண் ஆக்கவாளிகள் எந்நிலையிலிருந்து தங்கள் முன்னெடுப்பைத் தொடுப்பது என்பதுதான் நம் வினா. தலித் அரசியல் நிலையில்தான் அதனை முன்னெடுக்கவேண்டும். அரசியலில் எத்தனையோ உயர்பதவிகளில் தலித்துகள் இருக்கின்றார்கள். பெரும்பணக்காரர்களாகவும் இருக்கின்றனர் ஆனால் அவர்களின் மீதான சாதி இழிவு போய்விட்டதா என்றால் இல்லை எல்லாரும் ’அவங்கதான்’ என்றுதான் இன்றளவும் பேசப்படுகிறார்கள். பெண்களும் அப்படித்தான் பெரும்பதவிகளும், செல்வங்களும் இருந்தாலும் பெண் என்னும் எண்ணம்தான் எப்போதும் இருக்கின்றது. பவுத்தர்களாக மாறியபிறகு தலித்துகளுக்கான சமதர்ம வாழ்வு சாத்தியப்படுகிறது, பிற மதங்கள் எல்லாம் இங்கு இந்து சாயலில்தான் இருக்கின்றன. <br /><br />பெண் அடையாளத்தினை அறிவுத்தளத்திலும் சமூகத்தளத்திலும் நாம் மாற்ற வேண்டியுள்ளது. பாமா,சிவகாமி போன்ற தலைமுறையினர் தலித் இலக்கியத்தின் இயங்குதளத்தினை வெகு ஆழமாக்கி வைத்திருக்கின்றனர். சுகிர்தராணி போன்றோர்கள் பெண்மொழிக்கவிதைகளை அதன் வீரியத்தோடு ஆக்கி இருக்கின்றனர். பெண்ணெழுத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல இந்துத்துவத்திற்கு எதிராக ஆக்கங்களை உருவாக்கும் ஆளுமைகளாக இவர்கள் மாறவேண்டும். பௌத்தம் பேசும் ஆக்கங்களை இவர்கள் தர வேண்டும். பௌத்தமீட்சி ஒன்றுதான் தலித்துகளையும் பெண்களையும் விடுவிக்கும். அதற்கான ஏற்பாடுகளோடு பெண்ணிலக்கியம் பயணப்படவேண்டும். அது இந்தத் தலைமுறை ஆக்கவாளிகளில் கு.உமாதேவியின் கவிதைகளில் வந்துகொண்டிருக்கின்றது என்று நான் அவதானிக்கிறேன்.பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-50164347619128361472010-02-19T09:17:00.000-08:002010-02-19T09:25:56.844-08:00தருணம்தருணத்தின் அமைவு கிட்டாத எதுவும்<br />இன்மையோடு தொடர்கிறது<br />வந்ததிலிருந்தே வருகை குறித்த பெருமிதம்<br />மிகைந்து அழிகிறது துளித்துளியாய்<br />போகையில் அழிந்த எந்த துவாரமும்<br />காற்றையோ <br />நீரையோ <br />கொண்டு செல்வதில்லை<br />வருகையில் மிஞ்சும் போவதைக் <br />குறித்த எந்த பிரக்ஞையுமின்றி<br />இருக்கின்றோ மெல்லாம் நாம்பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-55995814963222836722010-02-04T17:12:00.000-08:002010-02-04T17:14:06.277-08:00ஏதோ<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdP1aKvGECZDnz_hvDmM4PJltxYvSvbB7F6HWSxgHqlM1Zg8OZtxM0GHoz0h8HYjfxFb1KIff2dtg-4RxyUZMCgnqBWJXr_ZTIn-KKRk37gVLPpYzuuH1-rp0t3igycVG9qBh-d16C9ZI/s1600-h/arta.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 277px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdP1aKvGECZDnz_hvDmM4PJltxYvSvbB7F6HWSxgHqlM1Zg8OZtxM0GHoz0h8HYjfxFb1KIff2dtg-4RxyUZMCgnqBWJXr_ZTIn-KKRk37gVLPpYzuuH1-rp0t3igycVG9qBh-d16C9ZI/s320/arta.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5434561430736188402" /></a><br />தீர்க்கமானக் கோடுகளால் வரையக்கூடியன<br />அல்ல அவை<br />பகடிகளற்ற சொற்கள் உலவும் வனம்<br />பிசிறுகள் சற்றேனும் இல்லா மேகம்<br />ஊறிய தேனில் மிதக்கும் மதுரம்<br />யாருமற்ற வெளியொன்றின் மௌனம்<br />எல்லாவற்றிலும்<br />இருக்கும் உன் எஞ்சிய அழகிடை<br />என்ன இருக்கின்றடு இன்னும்<br /><br />யாழன் ஆதிபறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-88978125473886652292010-01-15T18:01:00.000-08:002010-01-15T18:02:30.322-08:00புத்தகக் கண்காட்சி : புத்தாக்கம் செய்யும் தளம்எப்படியாவது கடைசி( 10/01/10) நாளன்றாவது புத்தகக் கண்காட்சியைப் பார்த்து விடவேண்டும் என்று மனது துடித்தது. கடந்த வாரம்(03/01/10) ஞாயிறன்றே புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதாகத்தான் திட்டம். ஆம்பூரிலிருந்தே இமைகள் தோழர்கள் விஜயராஜனும் ஞானவேலும் ஆம்பூரின் அழகிய தமிழ்மகன் தேவாவும் நானும் செல்வதாகத்தான் திட்டமிட்டோம். இவர்களுடன் செல்வது என்பது மிகவும் பிடித்தமான விஷயம். என்னவென்றால் இலக்கியம் குறித்தும் சினிமா குறித்தும் பேசிக்கொண்டே போகலாம். சாப்பாடி பிரச்சினை இருக்காது. வீட்டிலிருந்தே சாப்பாடு கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். கண்டிப்பாக அதில் புளி சோறு இருக்கும் முட்டையுடன். படிக்குங்காலத்தில் எங்காவது சுற்றுலா செல்வது போன்ற உணர்வினைத் தரவல்லது அது. புத்தகக் கண்காட்சியிலும் எந்தெந்த புத்தகங்களை வாங்கலாம் என்றெல்லாம் ஆலோசனை வழங்குவார்கள்.<br /><br />இதில் என்னவாயிற்று என்றால் தேவா அச்சகத்தில் வேலை வந்துவிட்டது என்று நின்றுவிட்டார். திடீரென்று என்னுடைய அன்பிற்குரிய பேராசிரியர் அய்.இளங்கோவன் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது அவரைப் பார்க்க வேண்டும் என்பது முக்கியமானது எனவே நானும் போகவில்லை. நண்பர்கள் விஜயனும் ஞானவேலும் மாத்திரமே போயிருந்தார்கள். அங்கிருந்து நேரிடையாக வர்ணனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுடனே புத்தகக் கண்காட்சியில் இருந்ததைப் போன்று இருந்தது.அடுத்த வாரம் போய்விட வேண்டுமென்று முடிவெடுத்தேன்.<br /><br />அதனால் கடைசி நாளன்று கிளம்பிவிட்டேன். லால்பாக் தொடர்வண்டியில் ஏறி சென்னை அடைந்து தலித் முரசு அலுவலகத்திற்கு அங்கு ஆசிரியரை சந்தித்து மதிய உணவை அங்கேயே முடித்துக்கொண்டு புத்தகக் கண்காட்சிக்கு வந்து சேர்ந்தபோது மூன்று மணி. தொடர்வண்டியில் வரும்போது தம்பி சோழனுக்கு சொல்லியிருந்தேன். தம்பி சோழன் இயக்குனராவதற்கு முயர்சி செய்துகொண்டிருக்கும் தோழர். எங்கள் ஊர்க்காரர். கூத்துப்பட்டறையின் முக்கியமான நடிகராக இருந்து இப்போது வெளியேறி பயிற்சியாளராக இருக்கின்றாஅர். அதிகம் வாசிக்கக் கூடிய தம்பி. இந்தப் புத்தக கண்காட்சியில் ஏறக்குறைய 5000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருக்கின்றார் என்றால் புரியும் அவருடைய வாசிப்பு தாகம். எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் அவரின் ஆர்வம் அவரை ஆசானாக மாற்றிக்கொண்டுள்ளது. சோழனின் வளர்ச்சி எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.<br /><br />பேராசிரியர் அய்.இளங்கோவன் எழுதிய நூலின் ஆங்கிலப் பதிப்பை எடுத்துக்கொண்டு புத்தகக் கண்காட்சியில் வைக்க அந்த பிரமாண்டத்துள் நுழைகிறேன். கருப்புப் பிரதிகள் நண்பர் நீலகண்டன் கொள்கை வழி பதிப்பாசிரியர். கண்டதையும் போட்டு பணம் பார்க்க அவர் எண்ணியதே கிடையாது. மாறாக அம்பேத்கர் பெரியார் மற்றும் விடுதலைக் கருத்தியலை உயர்த்திப் பிடிக்கும் நூல்களையே அவர் பதிப்பிப்பார். அவருடைய கடைக்குத்தான் நான் போகவேண்டும். உள்ளே நுழைந்ததும் அவர்தான் கண்ணில்பட்டார். அவரோடே கருப்புப் பிரதிகளுக்குச் சென்று புத்தகத்தை ஒப்படைத்தேன். அங்கே தோழர்கள் கவின்மலரும் சுகிர்தராணியும் வந்தனர். ஆளுக்கொரு வணக்கத்தைப் போட்டு, அப்போதுதான் வந்த விவரத்தையும் சொன்னேன். போய் அனைத்தையும் பார்த்துவருவதாகச் சொல்லிவிட்டும் போனார் சுகி. நானும் கவினும் புத்தகக் கண்காட்சியில் கடைகளைப் பார்த்துக் கொண்டே வந்தோம். பெரிய பெரிய புத்தகங்கள், அழகழகான அட்டை வடிவமைப்புகள் எல்லா புத்தகங்களயும் வாங்கிவிடவேண்டும் என்று மனம் ஆவலாதித்தது. ஆனால் வழக்கமாக நமக்கிருக்கும் பொருளாதார நெருக்கடி நம்மை கையைப் பிடித்து இழுத்துக்கொண்டது. நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் கவிதைகளயே வாங்கவேண்டும் என்னும் முடிவோடுதான் சென்றிருந்தேன்.<br /><br />கவினைக் கேட்டதற்கு பெரிய பெரிய புத்தகங்களை வானகச் சொன்னார்கள். அது நம்மால் ஆகாது என்று ஏற்கெனவே எடுத்த முடிவினை செயற்படுத்த ஆரம்பித்து கவிதைகளை வாங்கினேன். உயிர்மை விளம்பரப்படுத்தியிருந்த சில்வியா பிளாத் போன்றோரின் தொகுப்புகள் வராதது வருத்தமாக இருந்தது.வம்சி புத்தகங்கள் வடிவமைப்பில் புதிய பொலிவினைப் பெற்றிருந்தது. அங்கே கைக்கு அடக்கமாக ஒரு அழகிய புத்தகத்தை வாங்கினேன். வித்தியாசமான அமைப்புடன் இருந்த கிரியா வுக்குப் போனேன். அங்கே திரு.ராமகிருஷ்ணனை சந்தித்தேன். முன்பு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் பணியாற்றிய போது அவரை சந்த்தித்து இருந்தேன். அதற்குப் பிறகு இப்போதுதான் பார்த்தேன். அவர்களும் கைக்கு அடக்கமாகத்தான் புத்தகங்களை வடிவமைத்து இருந்தனர். ழாக் பிரேவரின் சொற்கள் தொகுப்பை வாங்கினேன். உயிர்மைக்கு வந்து சில கவிதை தொகுப்புகளை வாங்கினேன். அங்கே எஸ்.ராமகிருஷ்ணனும்,சாருவும் புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தனர். எஸ்.ராமகிருஷ்ணனின் சட்டைப் பையில் விஐபி அட்டை வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அது சொல்லவில்லையென்றாலும் அவர் விஐபி தானே! <br />நேரம் போதவில்லை மறுநாள் பள்ளிக்குப் போகவேண்டிய இருந்தது. சோழனை அனுப்பிவிட்டு தோழர் ஆர்.ஆர்.சீனிவாசனின் மின்னஞ்சல் அழைப்பிற்காக பூவுலகின் நண்பர்கள் அரங்குக்குச் சென்றேன். மிக நல்ல முயற்சி. சுற்றுச்சூழலுக்காகவும் மக்களின் வாழ்வுக்காகவும் அவர் எடுக்கும் படங்கள் மட்டுமல்ல, முயற்சிகளும் தோள் கொடுக்கப் பட வேண்டியவை. வாங்கி வந்திருக்கும் புத்தங்களை இன்னும் படிக்க ஆரம்பிக்க வில்லை. புத்தகக் கண்காட்சி உண்மையிலேயே இவ்வாண்டு எனக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்து இருக்கின்றது என்றால் பொய்யில்லை.பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-63458380268754119432009-10-29T19:03:00.001-07:002009-10-29T19:13:56.125-07:00<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaWBKArLYq9qtoSgJK05SHvgf74Ay_yqY-q2YhsbkUpBvBuQzp_WrgiQ8bcUKnpWEfyVhZ3kp-UGj7JS2jheEUe8kRRqWqL0b6cx1tBw6dqkxDMPM1zcH37OQNFXPVGnPj4LO9y037EmY/s1600-h/3661989-3-masai.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 135px; height: 135px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaWBKArLYq9qtoSgJK05SHvgf74Ay_yqY-q2YhsbkUpBvBuQzp_WrgiQ8bcUKnpWEfyVhZ3kp-UGj7JS2jheEUe8kRRqWqL0b6cx1tBw6dqkxDMPM1zcH37OQNFXPVGnPj4LO9y037EmY/s320/3661989-3-masai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5398209144542256434" /></a><br />அண்மையின் கைகளில் என்னைத் தந்துவிட்டு <br />செல்கிறது காலம் <br />அதன் துணிவுகளோடு செல்ல இயலாத என்னை<br />விட்டுவிட்டு சென்றுவிடுவதாக அச்சுறுத்துகிறது<br />திராணியற்ற ஒரு போர்ச்சேவகனைப் போல<br />என் வாளையும் போர் உடைகளையும் நான் களைந்துவிட்டு<br />காத்திருக்கின்றேன்<br />எதிரிகளின் தண்டனைகளை தரப்போகும் ஆணைகளுக்காய்<br />போரற்ற பிராந்தியத்தில் என்னை விடவேண்டும் என்னும் <br />எண்ணம் இருப்பதாய் சொல்லுகிறார்கள் உளவாளிகள்<br />ஆனாலும் தாக்குதலுக்கு உள்ளாகாமல் இருக்கவும்<br />முடியாதென்கிறார்கள்<br />தாக்குதலற்ற போரும்<br />இழப்புகளற்ற அன்பும்<br />காதலிலும் இல்லை கண்மணி கிளாடிபறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-53839366239337326792009-10-29T19:00:00.001-07:002009-10-29T19:02:20.611-07:00அ.முத்துகிருஷ்ணனுக்குத் திருமணம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7zUAwgCgQx21pWQu0hTAv_lP-bP_IpWe4bzNKa6PVcKLmpIpi-6jaO511K1_uaJWjUBA3oFx_d7DCRI3tPiEAiQIBo0rs81razwhaZybKw8RQdJTxxkh5PxFub09O6HfIYzUyV9r9WWQ/s1600-h/A.Muthukrishnan.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 86px; height: 130px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7zUAwgCgQx21pWQu0hTAv_lP-bP_IpWe4bzNKa6PVcKLmpIpi-6jaO511K1_uaJWjUBA3oFx_d7DCRI3tPiEAiQIBo0rs81razwhaZybKw8RQdJTxxkh5PxFub09O6HfIYzUyV9r9WWQ/s320/A.Muthukrishnan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5398207498773505874" /></a><br />அன்புமிக்க நண்பர் முத்துவுக்குத் திருமணம். 30.10.09 மாலை 6.00 மணியளவில் மதுரையில் நடைபெறுகிறது. தமிழகத்தின் மிக முக்கியமான எழுத்தாளன். கோணங்கியைப் போல பயணம் செய்யக்கூடியவர். மிக எளிமையான மனிதர். நுட்பமான தரவுகளையெல்லாம் எடுத்து கட்டுரைகளை எழுதக்கூடிய திறனுடையோர்.ஆங்கிலப்புலமையும் வடநாட்டில் அவரின் தொடர்பும் அவரின் எழுத்துகளுக்கு மிகவும் பயன் தரத்தக்கன.<br /><br />முத்துக்கிருஷ்ணனை வாழ்த்துவோம் நண்பர்களே!பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-1121741371074128152009-09-08T05:52:00.000-07:002009-09-08T05:57:56.297-07:00டேவிட். டி.பக் : படைப்பின் மீதான காதலன்அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்பது குறள். குறள் குறித்த பெருமிதம் என்பது வேறு தமிழர்கள் அதைப் படிப்பது அல்லது பின்பற்றுவது என்பது வேறு. ஆனால் இங்கே கூறப்பட்ட குறளின் வரி மிகவும் சிறப்பானது. அன்பை யாராலும் அடைக்கமுடியாது அதற்கான தாழ்ப்பாள்களை இதுவரை யாரும் உருவாக்கவில்லை. அப்படிப்பட்ட அன்பின் இருப்பிடமாகத்தான் வந்தார் திரு. டேவிட்.டி.பக் அவர்கள். டேவிட் அமெரிக்காவின் கெண்டிகா பகுதியைச் சார்ந்தவர். அவரின் பெற்றோர் இந்தியாவில் ஒருகாலத்தில் தமிழகத்தில் வசித்து வந்ததால் தமிழோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின் அவர்கள் அமெரிக்காவுக்கே திரும்ப சென்றுவிட்டார்கள். ஆனால் தமிழை மறக்க முடியாத தீராத அன்புகொண்ட டேவிட் எழுபதுகளில் மீண்டும் தமிழகம் வந்திருக்கின்றார். மதுரையில் ஈராண்டுகள் தங்கி அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலம் சொல்லித்தந்துள்ளார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அதே வேளையில் தமிழையும் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டுள்ளார்.<br /><br />தமிழின் மேல் மிக்க பற்றுடையவராகத் தன்னை மாற்றிக்கொண்ட டேவிட் தமிழ் இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தைத் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றார்.தமிழின் முக்கிய இலக்கியங்கள் பலவற்றை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்துள்ளார் டேவிட். அதில் மிகவும் முக்கியமானது குற்றாலக் குறவஞ்சி. <br /><br />ஒருமுறை டொராண்டாவில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் பாண்டிச்சேரி பிரஞ்ச் நிறுவனத்தின் கண்ணன் அவர்களைச் சந்தித்த டேவிட் தலித் இலக்கியம் எனது அனுபவம் என்னும் நூல் ஒன்றைத் தர அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி இருக்கலாம். தலித் இலக்கியம் எனது அனுபவம் என்னும் நூல் தமிழில் மிகமுக்கியமான நூல் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு படைப்பாளி தன் அனுபவங்களைப் பற்றி கூறி அவரின் படைப்புகளில் சிலவற்றை சேர்த்து தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.<br />அதில் இருந்த எல்லா படைப்பாளிகளையும் சந்திப்பதற்காக அவர் சென்னை வந்திருந்தார். தலித்முரசு ஆசிரியர் திரு.புனித பாண்டியன், முற்றுகை ஆசிரியர் திரு.யாக்கன் ஆகியோரைச் சென்னையில் சந்தித்துப் பேசிவிட்டு பிறகு என்னைப் பார்க்க ஆம்பூருக்கு வந்திருந்தார்.<br /><br />06.09.09 ஞாயிறு அன்று காலை பிருந்தாவன் விரைவு தொடர்வண்டியில் வந்தார். மிகவும் எளிமையாக இருந்தார். நம்முடைய சூழ்நிலையை அப்படியே தனதாக்கிக் கொள்ளக்கூடியவராக இருந்தார். அறுபதைக் கடந்தவர்.ஆனால் மிகவும் சுறுசுறுப்பானவர். என்னுடைய இருசக்கர வாகனத்தில் ஆம்பூரைச் சுற்றிக்காட்டினேன். பிறகு கஸ்பாவிற்கு வந்தோம். கொஞ்ச நேரம் தூங்கினார். பிறகு என்னுடைய பெற்றோர்களுடன் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். பதில் சொன்னேன். எங்கள் தெருவில் அப்போது சிறுவர்களும் பெரியவர்களும் தாயம் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் அவரும் கலந்துகொண்டார்.தெருவில் அமைர்ந்து அவர் பிள்ளைகளோடு தாயம் விளையாடியது எங்கள் தெரு மக்களுக்கு ஒரே வியப்பு. கூடுதலாக என்னவென்றால் அவர் பேசிய தமிழ்.அது அவர்களுக்கு மிகவும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.<br /><br />பிறகு மீண்டும் ஆம்பூரை சுற்றினோம். எங்கள் தலித் பகுதியின் நாட்டாண்மை திரு.வெங்கடேசனை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தேன். <br />‘இவர் எங்கள் சேரியின் தலைவர்’<br />’ஓ.. அப்படியா! வணக்கம்’ என்று கைகொடுத்தார் டேவிட்.<br />’ஐ யாம் ப்ரெசிடெண்ட்’ என்று சத்தமாக ஆங்கிலத்தில் கூறினார் எங்களூர் தலைவர். <br />உடனே டேவிட் ’நாட்டாமை’ என்று சொன்னார். ஒரு நிமிடம் உறைந்த்ப் போனார் எங்களாவர்.<br /><br />அடுத்து ஒரு பிரியாணி கடைக்குப் போய் மாட்டிறைச்சி பிரியாணி ருசி பார்க்கலாம் என்றேன். ஒரு பிளேட் வாங்கி கொஞ்சம் சாப்பிட்டார். அதன் ருசி மிகவும் அருமையாக இருந்தது என்று அவர் சொன்னார். முழுமையாக சாப்பிட்டு இருக்கலாம் ஆனால் அழகியபெரியவனின் வீட்டில் மதிய உணவு சாப்பிடுவது என்று திட்டம். அதனால் நல்ல பிரியாணியையும் விட்டுவிட்டு வந்துவிட்டோம். <br /><br />பிறகு நேராக அழகிய பெரியவனின் வீட்டிற்குச் சென்று அங்கு அவருடன் உரையாடிவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு பின் சாப்பிட்டோம். அழகிய பெரியவனின் துணைவியார் மிகச்சிறப்போடு அன்புகலந்து சமைத்திருந்தார். மிக அருமையான சாப்பாடு. அங்கிருந்து பாலூர் என்னும் தலித் கிராமத்திற்குச் சென்றோம். அந்த கிராமத்தை மையமாக வைத்து அழகிய பெரியவன் கதை ஒன்று எழுதியிருந்தார். அந்த கிராமத்தைப் பார்த்துவிட்டு அங்கு கூடியிருந்த இளைஞர்களுடன் உரையாடிவிட்டு திரும்பினோம். வழியெல்லாம் பேசிக்கொண்டே வந்தோம். ஆம்பூரில் அய்ந்து மணிக்கு பிருந்தாவன் பிடித்தால் சீக்கிரம் வந்துவிடலாம் என்று நினைத்து வேகமாக வந்து டிக்கெட் வாங்கினோம். ஒரு மணிநேரம் மிகவும் தாமதமாக வந்தது அந்தத் தொடர்வண்டி. ஆம்பூர் ரயில் நிலையத்தில் அமர்ந்துக் கொண்டு பேசினோம். அவர் தலித் இலக்கியம் எனது அனுபவம் என்னும் புத்தகத்தை மொழிபெயர்க்கப் போவதையும் அதற்காக அவர் பெங்குவின் நிறுவனத்தை அணுக இருப்பதையும் கூறினார். ஆம்பூர் மிகவும் பிடித்துப் போய்விட்டதாகவும் கூறினார். வானத்தில் மேகம் சூழ்ந்தது. மழை தூறியது. டேவிட் தன் பையில் குடை வைத்திருந்தார். மழைக்குப் பிடித்துகொண்டார். எனக்கு மழையில் நனைவது பிடிக்கும் என்றேன். தனக்குப் பிடிக்காது என்றார். தொடர்வண்டி வந்தது. அன்போடு விடை கொடுத்தேன்.பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-9442585507256041102009-08-29T18:59:00.000-07:002009-08-29T19:09:14.636-07:00அதுவும்<span style="font-size:85%;"><span style="color: rgb(102, 51, 51);">எதையும் உதிர்க்கும் மரம் உன் லாவகத்தை சொல்கிறது</span><br /><span style="color: rgb(102, 51, 51);">அதனினும் இன்னும் சிறப்பு உனக்கான சிரிப்பு</span><br /><span style="color: rgb(102, 51, 51);">நீயற்ற வெளியெனினும் அதில் உன்னை நிரப்புகிறாய்</span><br /><span style="color: rgb(102, 51, 51);">தயக்கமில்லாத உன் இயல்பு காற்றாலானது</span><br /><span style="color: rgb(102, 51, 51);">கடந்துசெல்லும் உனது வாசம் துரோகமற்றது</span><br /><span style="color: rgb(102, 51, 51);">எதிரிக்குரிய பார்வையும் நட்புக்குரிய உன் பிரிதலும்</span><br /><span style="color: rgb(102, 51, 51);">எதற்குள் நம்மை தீர்க்கும் என்னும்</span><br /><span style="color: rgb(102, 51, 51);">நெடுநாளைய வழக்கிற்குள் ஏகாமல்</span><br /><span style="color: rgb(102, 51, 51);">மரத்தைப் போல் பூவொன்றை உதிர்த்துவிட்டு போ கிளாடி</span><br /><span style="color: rgb(102, 51, 51);">பூக்களில் உள்ள எறும்புகள் கடிக்கலாம் என்னை</span><br /><br /></span>பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-2224678024543702582009-08-11T08:28:00.000-07:002009-08-11T08:57:00.584-07:00ரூமிக்கு விருது<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1BE_f6f5bibwYqip4Uf89y-1ksiv-57jaeohFO0EfXgWiHQCfEshdarhj35kS_vkb8rKvP2jV5FPYbx_9jqFw8DotG6awy23XevN-wCLecqRgRdhWO8uhgJ2da5vx3DYjP8U7B_-CCDs/s1600-h/Nalli+Award+Booklet+Intro.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5368735624038125058" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 226px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1BE_f6f5bibwYqip4Uf89y-1ksiv-57jaeohFO0EfXgWiHQCfEshdarhj35kS_vkb8rKvP2jV5FPYbx_9jqFw8DotG6awy23XevN-wCLecqRgRdhWO8uhgJ2da5vx3DYjP8U7B_-CCDs/s320/Nalli+Award+Booklet+Intro.jpg" border="0" /></a><br /><div align="left"><span style="font-size:85%;">நாகூர் ரூமி என்னும் இலக்கிய ஆளுமையைப் பற்றி சன் தொலைக்காட்சி வீரபாண்டியன் கூறியதை இங்கே நான் இப்போதே சொல்லிவிடுகிறேன். நாகூர் ரூமி 'எழுத்து அசுரன்' என்பது தான் அது. அவருடைய உழைப்பு என்பது அசுரத்தனமானது ஆனால் அவரது எழுத்து என்பது 'அஜ்ரத்' தனமானது. அஜ்ரத் என்னும் அரபி சொல்லுக்கு குரு என்று பொருள்.</span></div><br /><div align="left"><span style="font-size:85%;"></span></div><br /><div align="left"><span style="font-size:85%;">பல தலைப்புகளில் தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தும் ரூமிக்கு நல்லி-திசை எட்டும் மொழிபெயர்ப்பு கிடைத்திருக்கின்றது. இலியட் என்னும் ஆகப்பழைமையான கிரேக்க காப்பியத்தினை ஆங்கிலம் வழி அவர் தமிழுக்குத் தந்துள்ளார். அவர் மொழி பெயர்ப்பின் பிரதி , மூலத்தினை நகலெடுக்கும் வேலையினாலானது அல்ல. ஆனால் அதை உள்வாங்கிக்கொண்டு தன்னுடைய படைப்புச் சாயலாகவே தருவது எனபது அவரின் தனித்தன்மை. </span></div><br /><div align="left"><span style="font-size:85%;">விருதுகள் என்பவை ஒரு கலைஞனுக்கு ஊக்கத்தை தரக்கூடியது. கைத்தட்டலும் பாராட்டலும் ஒரு கலைஞன் வாழும்போதே அவனுக்குத் தரப்படவேண்டும்.அதுவும் அவன் இளமையாக இருக்கும்போதே தரப்படவேண்டும். அப்போதுதான் அவன் கொண்டாடப் படுவான். ஆனால் தமிழ்ச்சூழல் அப்படியானதாக இல்லாமல் போனது வருத்தத்திற்கு உரியது. எழுத்தாளன் வயதான பின்போ அல்லது இறந்த பின்போ அவனைப் போற்றி புகழ்ந்து என்ன லாபம் இருக்கப் போகிறது. </span></div><br /><div align="left"><span style="font-size:85%;">ஆனால் நல்லி விருது திறமையானவர்களுக்குப் போய் சேர்ந்திருக்கின்றது என்பது மிகவும் முக்கியமானது. அதுவும் விருது வழங்குவதில் எந்தவிதமான அரசியலும் குழுமனப்பான்மையும் இல்லாமல் கொடுக்கப் பட்ட்டிருக்கின்றது திறமையாளர்களுக்கும் குழு மனப்பான்மை ஏதும் அற்று தனிமையில் இயங்கும் ஆற்றலுள்ள ரூமி போன்றவர்களுக்கு கிடைத்திருப்பது திசை எட்டும் இதழுக்குரிய தகுதியை அதிகப் படுத்துகிறது. மொழிபெய்ர்ப்பு இதழாக தமிழில் வந்துகொண்டிருக்கும் திசை எட்டும் சிறந்த பணியினை ஆற்றியிருக்கின்றது.</span></div><br /><div align="left"><span style="font-size:85%;">நாகூர் ரூமி இருபத்தி ஏழு புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கின்றார். படைப்பு வெளியைத் தாண்டி சுயமுன்னேற்ற புத்தகங்கள் போன்றவையும் அதில் அடங்கும். ரூமி எழுதும் முறையினைப் பற்றி சொல்ல வேண்டும் இரவு ஆரம்பித்து விடியல் நான்கு மணிவரை அவர் தொடர்ந்து கணிப்பொறியில் தட்டச்சுவார். மீண்டும் ஏழு மணிக்கு மேல் தொடங்கிவிடுவார். இந்த அர்ப்பணிப்பும் அயராத உழைப்புமே அவரை விருது பெற வைத்திருக்கின்றது எனில் அது புகழ்ச்சி இல்லை மெய்.<br /></div></span>பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-39520590556160690572009-07-29T10:23:00.000-07:002009-07-29T10:33:26.815-07:00உன் கவிதை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8GNyb342xyApjQfuKbP2OcA-31EuIaNW3LAeVE4jhiKw_Zu9Gp6otae5LV6tQQtXeaLbojX-QA0-tFfG0IixZWTW1nEUHXsOwtCAf97zFe6or_fIzc33ah06hDHc8jXrowIqFbjIPPL0/s1600-h/mayiliraku.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8GNyb342xyApjQfuKbP2OcA-31EuIaNW3LAeVE4jhiKw_Zu9Gp6otae5LV6tQQtXeaLbojX-QA0-tFfG0IixZWTW1nEUHXsOwtCAf97zFe6or_fIzc33ah06hDHc8jXrowIqFbjIPPL0/s320/mayiliraku.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5363936418383601778" /></a><br /><span class="Apple-style-span" style="font-size:100%;"><span class="Apple-style-span" style="font-size:13px;">ஆகையினால் நீங்கள் உங்களின்</span></span><div><span class="Apple-style-span" style="font-size:100%;"><span class="Apple-style-span" style="font-size:13px;">கவிதைகளைப் படிக்காதிருங்கள்</span></span></div><div><span class="Apple-style-span" style="font-size:100%;"><span class="Apple-style-span" style="font-size:13px;">எவ்வாறேனும் தளும்பி வழியும்</span></span></div><div><span class="Apple-style-span" style="font-size:100%;"><span class="Apple-style-span" style="font-size:13px;">நீரைப் போல கவிதைகள் வந்துவிடலாம்</span></span></div><div><span class="Apple-style-span" style="font-size:100%;"><span class="Apple-style-span" style="font-size:13px;">அஜாக்கிரதையாக இருந்தீர்கள் எனில்</span></span></div><div><span class="Apple-style-span" style="font-size:100%;"><span class="Apple-style-span" style="font-size:13px;">உங்களைக் கொன்று வெளிவரும் கவிதை</span></span></div><div><span class="Apple-style-span" style="font-size:100%;"><span class="Apple-style-span" style="font-size:13px;">அப்போது அது உங்களுடையது என உங்களாலும்</span></span></div><div><span class="Apple-style-span" style="font-size:100%;"><span class="Apple-style-span" style="font-size:13px;">சொல்லமுடியாது போகலாம்</span></span></div><div><span class="Apple-style-span" style="font-size:100%;"><span class="Apple-style-span" style="font-size:13px;">வேரைப் போல இருக்கும் அந்தக் கவிதை</span></span></div><div><span class="Apple-style-span" style="font-size:100%;"><span class="Apple-style-span" style="font-size:13px;">உங்கள் கற்பாறைகளையும் ஊடுருவலாம்.</span></span></div>பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-84870558655093888942009-07-21T09:20:00.000-07:002009-07-21T09:28:57.025-07:00<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZl_PMGm24Zaq-KatKFQSF5-37gNfg3RfYaAfgw7G2ngSYr9ZnnMMC85eGVBu2kukzQGOTwoL5UQYB_Z6PJczqw1nwXA2rBMOPEm4-LhmFmXglj2l15Gp2STHLL0r0TAah835rX6nhyphenhyphenXg/s1600-h/area.gif"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 249px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZl_PMGm24Zaq-KatKFQSF5-37gNfg3RfYaAfgw7G2ngSYr9ZnnMMC85eGVBu2kukzQGOTwoL5UQYB_Z6PJczqw1nwXA2rBMOPEm4-LhmFmXglj2l15Gp2STHLL0r0TAah835rX6nhyphenhyphenXg/s320/area.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5360950502233386370" /></a><p class="MsoNormal" style="text-align:justify"><b><span lang="TA" style="line-height:115%;mso-bidi-language: TAfont-family:Latha;"><span class="Apple-style-span" style="font-size: medium;">நீக்கப்படாத அவை குறிப்புகளும் ஆதவனின் குறைந்த ஒளியும்</span></span></b></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="line-height:115%;mso-bidi-language:TAfont-family:Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;">மதுரையில் நடந்த கடவு கூட்டத்தில் தமிழ்நதிக்கும் ஆதவன் தீட்சண்யாவிற்கும் நடந்த உரையாடலை வாசித்து முடித்தபின் மிகவும் அயர்ச்சி அடைந்தேன். ஆதவனின் பேச்சும் அவரின் பதில் கடிதமும் அவரின் மதிப்பை (இதற்கு கூட ஆதவனால் பகடியாக ஏதாவது கூறமுடியும். எ.கா. உம் மதிப்பு ஒண்ணும் மசுர வளர்க்காது) வெகுவாக குறைக்கிறது என்றே சொல்லவேண்டும். உத்தபுர சுவர் விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த செயல்பாடுகளை எழுத்தில் வடித்து தமிழகத்தில் சாதி ஒழிக்க வந்த ஒரே இயக்கம் அதுதான் என்பதற்காக தலித் முரசு போன்ற இதழ்களையெல்லாம் கூட அவர் விடவில்லை என்பது மிக முக்கியம். தன் கட்சிக்கு இவ்வளவு விசேஷமாய் அவர் உண்மையாக இருந்தார். ஆனால் அவரின் கட்சி உத்தபுர சுவரை சுட்டுத்தள்ளுவேன் என்று சூளுரைத்த?! ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து மதுரை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இருகைகளையும் கட்டிக்கொண்டு மேடையில் சிலையாட்டம் நிற்க வைக்கப்பட்ட மோகன் குறித்தெல்லாம் அவரால் பகடி செய்யமுடியவில்லை. அந்த அம்மா வேறு எப்படியாவது ஈழத்தை வாங்கித்தந்து விடுவேன் ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கும்போதும் பேசாமல் பேன் பார்க்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார்.</span></span><span style="line-height:115%;mso-bidi-language:TA"><span class="Apple-style-span" style="font-size: small;"><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="line-height:115%;mso-bidi-language:TAfont-family:Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;">அவரைப்போல அதிரடியாக நையாண்டி பேச நமக்கு வராது. ஆனால் எத்தனையோ ஆண்டுகளாக விடுதலைக்காகப் போராடும் மக்களை இவ்வளவு இழிவுப் படுத்தவேண்டும் என்னும் எண்ணம் எப்படி அவருக்கு வந்தது என்று தெரியவில்லை. வால்பாறைக் கூட்டத்தில் யவனிகாவின் தொகுப்பைப் பற்றி பேசிய மதிவண்ணன் சர்வதேச ஒடுக்குமுறை குறித்தெல்லாம் எழுதுபவர்கள்</span><span><span class="Apple-style-span" style="font-size: small;"> </span></span><span class="Apple-style-span" style="font-size: small;">தங்களை சுற்றியிருக்கும் சாதி பிரச்சனைப் பற்றி எழுத வேண்டாமா என்று கேட்ட கேள்விக்கும் படுகொலைச் செய்யப்படும் தமிழரைக் காக்க பெரும் எழுத்தாளர்களாகிய நீங்கள் எல்லாம் எழுதக் கூடாதா என்று தமிழ்நதி கேட்டதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். மதிவண்ணனின் கேள்விக்கு எதிர்கேள்வியாக நீங்கள் கங்காணிகளைப் பற்றி எழுதியிருக்கின்றீர்களா என்று மற்றவர்கள் கேட்டதையொத்துதான் பதில் அளித்து இருக்கின்றார் ஆதவன். தேசியத்திற்குள் ஒன்றுபட்டு இருக்கும் அவரின் மார்க்கிசியமே அவரை இப்படி பேசவைத்திருக்கின்றது என்ற உறுதியான நம்பிக்கையினை நாம் பரப்பலாம்.</span></span><span style=" line-height:115%;mso-bidi-language:TA"><span class="Apple-style-span" style="font-size: small;"><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="line-height:115%;mso-bidi-language:TAfont-family:Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;">தமிழ்நாட்டிலிருந்துப் போன தமிழர்களை அங்கிருந்த பூர்வீகத்தமிழர்கள் எப்படி நடத்தினார்கள்? திண்ணியத்திலே பீ தின்ன வைக்கப்பட்ட போது எங்கே போனீர்கள்? அதற்கு இப்போது பதிலைச் சொல்லுங்கள் இல்லையென்றால் ஒன்றுபட்ட இலங்கையில் வாழுங்கள் முடிந்தால் ராஜபக்சேவுடன் கூட்டணி வைத்து உங்களுக்கு இலங்கையில் மார்க்சிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்தால் கடலை மிட்டாய் வாங்கித்தருகிறோம் என்பார். தன்னுடைய தலித் அரசியலையே தன் எழுத்தில் போல கட்சியில் பேச முடியாமல் தவிக்கும் ஆதவனுக்கு அடுத்த தேர்தலில் ஓசூரில் நிற்க அதிமுக கூட்டணியில் வாய்ப்பு கிடைக்கலாம் அல்லவா?</span></span><span style=" line-height:115%;mso-bidi-language:TA"><span class="Apple-style-span" style="font-size: small;"><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="line-height:115%;mso-bidi-language:TAfont-family:Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;">சில விளக்கங்களைப் பெற விழைவதில் தவறேதும் இருக்காது என்றே நினைக்கின்றேன். இந்திய விடுதலைப் போர் நடைபெற்றபோது சாதி அற்றுப் போயா இது இருந்தது. அப்போது பொதுவுடைவாதிகள் இங்கு இல்லையா? அவர்கள் அப்போது தலித்துகளுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துப் போராடிக் கொண்டிருந்த புரட்சியாளர் அம்பேத்கருக்கு எவ்விதத்தில் உறுதுணையாக இருந்தார்கள். தலித்துகளைக் கொடுமைப்படுத்திய பார்ப்பன பனியாக்கள் கைகளிலும் இந்துத்துவ வாதிகளிடத்திலும் இந்திய சுதந்திரம் தரப்பட்டபோது இவர்களுடன் இருக்க முடியாது தலித்துகளுக்கு தனிநாடு கொடுங்கள் என்று கேட்ட அம்பேத்கருக்கு ஆதரவாக அன்றைய பொதுவுடைமைவாதிகள் இருந்தார்களா? இன்னும் தீர்க்கப்படாத கொடுங்கனவாக இருக்கின்ற சாதிப் பிரச்சனைகளை ஒழிக்க இப்போது மிகவும் வளர்ந்துள்ள ஆதவனின் கட்சி என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்பதை அவர் கூறாமல் ஈழப்போரில் தங்கள் வாழ்வைக் கொடுத்துப் போராடும் போராளிகளை குறை கூறாமல் இருக்கவேண்டும்.</span></span><span style="line-height:115%;mso-bidi-language:TA"><span class="Apple-style-span" style="font-size: small;"><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="line-height:115%;mso-bidi-language:TAfont-family:Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;">இன்றைக்குப் புலிகள் அழிக்கப்பட்டார்கள். வதைமுகாம்களாக மாறிப் போயிருக்கும் இலங்கை அரச முகாம்களில் தத்தளிக்கும் தமிழினத்தின் மக்களை எப்படி மீட்பது என்று சிந்திப்பது யார்? அவர்களுக்கான அரசியல் சார்ந்த உரிமைகளைப் பேசுவது யார்? ராஜபக்சேவும் அவருடைய அரசும் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துக் கொண்டுதான் இருக்கின்றது. தலித் பார்வையில் ஈழப்பிரச்சினையை அணுகவேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. அதே பார்வையில் ஆதவன் குடியிருக்கும் கோயிலான அவருடைய கட்சியைப் பார்க்கவேண்டும் என்றுதான் நாம் கேட்கிறோம். அதுதான் அவருடைய வார்த்தைகளுக்கான நியாய்த்தைப் பெற்றுத்தரும்.</span></span><span style="line-height:115%;mso-bidi-language: TA"><span class="Apple-style-span" style="font-size: small;"><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="line-height:115%;mso-bidi-language:TAfont-family:Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;">ஈழப்பிரச்சினையையும் இங்குள்ள சாதித்தமிழரின் போக்கையும் நாம் முடிச்சிப் போடமுடியுமா என்ன? இங்குள்ளவர்கள் ஈழப்பிரச்சினைய அரசியலின் பகடைக்காயாக மட்டுமே பார்க்கிறார்கள் என்பது ஆதவன் போன்ற அறிவுசாலிகளுக்கு தெரியாதா என்ன? </span></span><span style="line-height:115%;mso-bidi-language:TA"><span class="Apple-style-span" style="font-size: small;"><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="line-height:115%;mso-bidi-language:TAfont-family:Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;">ஈழத்தில் சாதி இல்லை என்று யாரும் சொல்லவில்லை. தலித் படைப்புகளைத் தந்த டேனியேலின் படைப்புகள் நமக்கு சொல்கின்றன எல்லாவற்றையும். ஆனால் அறுபது ஆண்டுகால பிரச்சனையினை அல்லது விடுதலைப் போரை எப்படி நம்மால் புறந்தள்ள முடியும். இந்திய விடுதலைக்கு தலித்துகள் பங்காற்றவில்லை என்று இப்போது இங்கே சிலபேர் கூப்பாடு போடுகிறார்களே அதுபோல் ஆகிவிடாதா? சரி புலிகள் அற்ற தமிழர்கள் இப்போது சிங்கள உழைக்கும் மக்களோடு இயைந்து வாழ்ந்திட இயலுமோ? அதற்கு ஆவணவற்றை ஆதவன் செய்வாரா? எங்கள் ஊர்ப்பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ ஞானசேகரனை தோற்கடித்து விடுவார் போலிருக்கின்றது ஆதவன்.</span></span><span style="line-height:115%;mso-bidi-language:TA"><span class="Apple-style-span" style="font-size: small;"><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="line-height:115%;mso-bidi-language:TAfont-family:Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;">ஆதவன் மேலும் அவருடைய எழுத்துக்கள் மீதும் மாறாத பற்றும் நம்பிக்கையும் நாம் வைத்திருக்கின்றோம். அது தகர்ந்து போகும் அளவுக்கு சில நேரங்களில் அவருடைய செயல்கள் அமைந்துவிடுகின்றன.</span></span><span lang="TA" style=" line-height:115%;mso-bidi-language:TA"><span class="Apple-style-span" style="font-size: small;"> </span></span><span lang="TA" style="line-height:115%;mso-bidi-language:TAfont-family:Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;">ஈழத்தமிழர் இப்படி கொல்லப்படுகின்றனரே என்று கேட்டால் அவர்களிடம் இருக்கும் சாதியைப் பற்றி ஏன் நீங்கள் கவலைப்படவில்லை என்கிறார். இது அவரின் பார்வை. அப்படி அவர் பேசியிருந்தால் நாம் எந்த விதமான கருத்தினையும் சொல்லல்</span><span><span class="Apple-style-span" style="font-size: small;"> </span></span><span class="Apple-style-span" style="font-size: small;">ஆகாது. ஆனால் அவர் தலித் பார்வை என்று அதை கட்டமைக்கின்றபோது ஒட்டுமொத்த தலித்துகளின் நிலையா அது என்பது கேள்வியாக இருக்கின்றது. இத்தகைய கொடும் படுகொலையினைச் செய்த ராஜபக்சேவை அவர் ஒரு வார்த்தைகூட அவர் விமரிசிக்கவில்லை. அதற்குத் துணைபோன இந்தியாவின் சதியினை அவர் பேசவில்லை. பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து தன் ஆக்கங்களை வேண்டாம் ஒரு பேச்சாகக்கூட அவர் பிரசுரிக்கவில்லை. ஆனால் புலிகளைத் திட்டுவதும் அவர்களின் அரசியலை விமரிசிப்பதும் தன்னுடைய முழுமுதல் கடமையாகக் கொண்டிருக்கின்றார். ஈழத்தில் இருக்கும் சாதிய படிநிலையை வைத்துக் கொண்டுப் பார்த்தாலுமே யார் இப்போது ஈழத்தில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றார்கள்? இலங்கை அரசு நடத்தும் முகாம்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பவர்கள் யார்? யாரெல்லாம் தன்னுடைய மண்ணைவிட்டு வரமுடியாத சூழலில் இருக்கின்றார்களோ அல்லது அகதிகளாக உலகநாடுகளில் அலையாமல் தன் மண்ணிலேயே இருந்து கடைசிவரை பார்த்துவிடுவது என்று நினைக்கும் விளிம்பு நிலை மக்கள்தானே? அவர்களை கொத்தணி குண்டுகளையும் வேதி குண்டுகளையும் போட்டு கொன்ற கொடுமையைப் பேசமுடியவில்லை என்றால் தலித் விடுதலையினை மட்டும் எதை வைத்துப் பேசுவது என்பது நமக்கு சரியாக விளங்கவில்லை. </span></span><span style=" line-height:115%;mso-bidi-language:TA"><span class="Apple-style-span" style="font-size: small;"><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="line-height:115%;mso-bidi-language:TAfont-family:Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;">சாதியையும் அதன் வேரான இந்து மத்த்தையும் எதிர்க்காமல் புரட்சிபேசும் அவருடைய கட்சி சாதி மலிந்துப் போய் கிடக்கும் இந்தியாவில்தான் நடக்கின்றது. பாட்டாளி வர்க்கபுரட்சியையும் உழைக்கும் மக்களின் ஆட்சியையும் கொண்டுவருவது ஆகாது. கட்சியின் முக்கிய வேலை திட்டமாகவே சாதி ஒழிப்பை நிகழ்த்திவிட்டு அப்புறம் வர்க்க புரட்சியை வைத்துக் கொள்ளலாம் என ஆதவன் அங்கு பேசமுடியுமோ என்றால் கண்டிப்பாக முடியாது. ஏனென்றால் சாதி ஒழிப்பு என்னும் ஒன்றும் வேலைதிட்டங்களில் ஒன்று. </span></span><span style="line-height:115%;mso-bidi-language:TA"><span class="Apple-style-span" style="font-size: small;"><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="line-height:115%;mso-bidi-language:TAfont-family:Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;">ஈழத்திலும் அதைவைத்து தானே பார்க்க வேண்டும். விடுதலைப் புலிகளின் இயக்கத்தில்கூட எத்தனையோ தலித்துகள் உயர் பதவிகளில் இருந்திருக்கின்றனர். அதை வழிநடத்தி இருக்கின்றனர். புலிகளின் அரசியல் தவறு என்றால் உலகத்திலிருக்கும் இத்தனை கோடி தமிழர்கள் அதை எப்படி ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களின் சித்தாந்தங்களில் அதை நடைமுறை படுத்துவதில் சிக்கல்கள் அல்லது தவறுகள் இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக ஒரு விடுதலை இயக்கத்தையோ அல்லது அது போராடும் தேசிய விடுதலையினையோ சாதியின் பேரால் கொச்சைப் படுத்துதல் ஆகாது. அது தலித் பார்வை இல்லை. ஒடுக்கப்படுகின்ற மக்கள் யாராக இருந்தாலும் அவர்களின் விடுதலைக்காக பேசுவதே தலித்தியம். அது விடுதலைக்கான கருத்தியல்.</span></span><span style="line-height:115%;mso-bidi-language: TA"><span class="Apple-style-span" style="font-size: small;"><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="line-height:115%;mso-bidi-language:TAfont-family:Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;">புரட்சியாளர் அம்பேதகர் கருதுவதைப் போல தலித் விடுதலை என்பது பிற்படுத்தப்பட்டவரின் ஒத்துழைப்பையும் சார்ந்த ஒன்றுதான். தலித் பிற்படுத்தப் பட்டவரின் ஒற்றுமையை அவர் விரும்பியதைப் போல ஈழத்தமிழர்களின் விடுதலையும் சாதி கடந்துதான் வரும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. சாதியம் அது சார்ந்த பிரச்சினைகளயும்விட வாழ்தல் என்பதுவும் அதைவிட விடுதலை என்பதும் மிக முக்கியம்.</span></span><span style=" line-height:115%;mso-bidi-language:TA"><span class="Apple-style-span" style="font-size: small;"><o:p></o:p></span></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span style=" line-height:115%;mso-bidi-language:TA"><o:p><span class="Apple-style-span" style="font-size: small;"> </span></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="line-height:115%;mso-bidi-language:TAfont-family:Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;">இன்றைய சூழலில் தமிழர்களின் நிலை என்ன? அங்கே நிலவும் சாதி இப்போது அதாவது புலிகள் அல்லாத தமிழீழத்தில் எப்படி சாத்தியமாகும். கோட்பாட்டளவிலே இங்கேயே இருந்துக்கொண்டு நாம் வாய்பேசுவதைவிட அல்லது நாட்டை விட்டு வெளியேறி சுகமாக அயல்நாடுகளில் வாழ்வோரைவிட ஈழத்திலே கிடந்து அழிந்துக் கொண்டிருக்கும் அவர்கள் தான் பேசவேண்டும். பின் இவர்கள் பேசி என்ன ஆகப்போகிறது?</span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span style=" line-height:115%;mso-bidi-language:TAfont-size:10.0pt;"><o:p> </o:p></span></p> <p class="MsoNormal" style="text-align:justify"><span lang="TA" style="line-height:115%;mso-bidi-language:TAfont-family:Latha;font-size:10.0pt;"><span style="mso-spacerun:yes"> </span><o:p></o:p></span></p>பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-18018512601458491462009-07-20T19:41:00.000-07:002009-07-20T19:54:01.430-07:00<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgix6ERz9nHP2oJxuAQPfkr-ZSJTdBKG4R_ww_PYv2FPoWWmP3A16dIEfNXObvVyeCJJeA8dFI0FguT2vzLM-9TSNFta3VYldvrkEtB2YhyphenhyphenJeaiZREgVPtK_S2_Ykqzaew0VaiCKLKQvzA/s1600-h/DSC06530.JPG"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgix6ERz9nHP2oJxuAQPfkr-ZSJTdBKG4R_ww_PYv2FPoWWmP3A16dIEfNXObvVyeCJJeA8dFI0FguT2vzLM-9TSNFta3VYldvrkEtB2YhyphenhyphenJeaiZREgVPtK_S2_Ykqzaew0VaiCKLKQvzA/s320/DSC06530.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5360740502212689778" /></a><span class="Apple-style-span" style="font-size: small;"><br />ஒரு வகையில் யாரையும் குற்றம் சொல்ல</span><div><span class="Apple-style-span" style="font-size: small;">இயலா வாழ்வின் போக்கு</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">அனுமதியின் துணையின்றி வரும்</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">காற்றின் தன்மை புயலுற்று இருப்பதின் ரகசியம் புரியாமல்</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">எதிர்படும் நனவோட்டத்தின்மீது</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">எழுதப்படும் செலவுகள் குறித்த கணக்கை</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">சரிபார்க்க முடியா தருணத்தின் பூர்வீகத்தில் பூக்கும்</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">மலர்மீது அமர்வதும்</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">அல்லது</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">அம்மலரைப் பறிப்பதும்</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">பறிக்கப்பட்ட மலரின் வாசத்தை நுகர்தலும்</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">அனிச்சை செயலானபிறகு</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">மீன்களைக் கொத்தும் பறவை ஒன்றுக்கு</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">இறக்கைகளே துடுப்பாகிவிடுவது என்பது</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;"> தவிர்க்கவே இயலாததுதான்</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;"> எனவே இந்தக் கவிதையை இத்துடன்</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;"> முடிப்பதோ அன்றி தொடர்வதோ</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;"> கவிதையின் பாடு </span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;"> எழுதியவனைத் தேடும் எண்ணமற்று இருப்போர்</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;"> இதைப் படிக்க கடவர்.</span></div>பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-5004956307152374962009-06-29T18:02:00.000-07:002009-06-29T18:11:21.065-07:00போதலின் தனிமை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0cl4sQQE_p3PPAazCanWIQu1AYju9OCE68ZBca0oQ6rfs0mLVLjM4oSNjcUlJvtS8PF7XY4KJ4_ho5GtII9N4iNciz9NKCw4jPW6upH0PQ7F3D9Y6kMvmSvH5tA5fYDHoQXqqokoMTug/s1600-h/oldwoman_love.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 245px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0cl4sQQE_p3PPAazCanWIQu1AYju9OCE68ZBca0oQ6rfs0mLVLjM4oSNjcUlJvtS8PF7XY4KJ4_ho5GtII9N4iNciz9NKCw4jPW6upH0PQ7F3D9Y6kMvmSvH5tA5fYDHoQXqqokoMTug/s320/oldwoman_love.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5352921880541301458" /></a><br /><span class="Apple-style-span" style="font-size:small;">எல்லைகளைக் கடக்கின்ற பாதங்களில்</span><div><span class="Apple-style-span" style="font-size:small;">குவிந்திருக்கின்றது வழி</span></div><div><span class="Apple-style-span" style="font-size:small;"><br /></span></div><div><span class="Apple-style-span" style="font-size:small;">தன்னை மீட்க கடந்த தொலைவின் </span></div><div><span class="Apple-style-span" style="font-size:small;">நிழல் கசிந்த ஒரு நொடியில் ஆனது அனைத்தும்</span></div><div><span class="Apple-style-span" style="font-size:small;"><br /></span></div><div><span class="Apple-style-span" style="font-size:small;">வரவின் கூடலில் வந்தமரும் குருவிகளிடம்</span></div><div><span class="Apple-style-span" style="font-size:small;">இருப்பிடம் கேட்க</span></div><div><span class="Apple-style-span" style="font-size:small;">இறக்கையினை அடிக்கின்றன அவை</span></div><div><span class="Apple-style-span" style="font-size:small;"><br /></span></div><div><span class="Apple-style-span" style="font-size:small;">பேச்சரவம் அரவத்தினைப் போல</span></div><div><span class="Apple-style-span" style="font-size:small;">சுருண்டுக் கிடக்க</span></div><div><span class="Apple-style-span" style="font-size:small;">வார்த்தைகள் வாலாட்ட முனையாமல்</span></div><div><span class="Apple-style-span" style="font-size:small;">பம்முகின்றன</span></div><div><span class="Apple-style-span" style="font-size:small;">போகவேண்டிய இடம் குறித்த பிரக்ஞையில்</span></div>பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-88621165369698155082009-06-26T19:49:00.000-07:002009-06-26T19:54:12.664-07:00<span class="Apple-style-span" style="font-size: small;">இன்னும் முடியாத உங்களின் விவாதங்களை</span><div><span class="Apple-style-span" style="font-size: small;">என்ன செய்யமுடியும் உங்களால்</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">செவிகள் மறுத்த சொற்கள் மீள்கின்றன</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">மீண்டும் எங்களிடம்</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">சொற்களை அனுப்புவதற்குப் பதில்</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">கணைகளை வீசுகின்றீர்</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">கணைகள் நேரிடையானவை ஒரு சாதிவெறியனைப் போலெனின்</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">எங்கள் ஆயுதங்களை பயன்படுத்துவோம்</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">நட்பை கணைகளாக்கும் உங்கள்</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">தத்துவம் புரியாமல்</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">நிற்கிறோம்</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">எனினும் போர்க்காலம் என்பதை</span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;">மேகங்கள் தீர்மானிப்பதில்லை</span></div><div><br /></div>பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-48938838099387951842009-05-04T19:05:00.000-07:002009-05-04T19:09:36.092-07:00தமிழர்களின் தேர்தல்<a href="http://தம்ழர்களின்">http://தம்ழர்களின் தேர்தல்</a><br />தமிழீழப் பிரச்சனை அரசியல் பிரச்சனையாக மாற்றப்பட்டு அது அறுவடை செய்வதற்கான நேரமும் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. தேர்தல் வரப்போகிறது, இறுதியும் மூன்றாவது கட்ட தேர்தலில் தமிழகம் புதுச்சேரி ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி நடக்கிறது. மொத்தம் 107 மக்களவை தொகுதிகளில் மூன்றாவது கட்ட தேர்தல் நடக்கிறது. அதில் 40 தொகுதிகள் தமிழ் பேசக்கூடிய அல்லது தமிழர்களின் ஒட்டு மொத்த ஓட்டுகள் பதிவாகக் கூடிய இடங்கள்.<br />இந்த தேர்தல் மற்ற தேர்தல்களைவிட முக்கியமான ஒன்று. ஏனென்றால் ராஜிவ் படுகொலையை காரணமாக வைத்து யாரும் ஈழத்தமிழர் பிரச்சனையைப் பேசுவதில்லை. அப்படி பேசுபவர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக பார்க்கப்படுவதும் தடா பொடா போன்ற கொடும் சட்டங்களில் மாட்டி வைக்கப்படுவதும் நடந்துக்கொண்டிருந்தது. மதுரை திருமங்கலம் பொதுக்கூட்ட்த்தில் பேசியதற்காக வைகோ உட்பட பத்து பேர் பொடா சட்ட்த்தில் சிறையில் அடைக்கப்பட்டு பத்தொன்பது மாதம் சிறையில் அடைக்கப் பட்டார்கள் அதுவும் தற்போது அவர் மிக பிரமாண்டமாய் நம்பியிருக்கும் அவரின் தலைவி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது. தற்போது முதல்வராக இருப்பவர் அதை எதிர்த்து போராடினார்.வைகோவை விடுதலைச் செய்ய முதல் கையெழுத்தைப் போட்டார். அவர் இப்போது முதல்வராக இருக்கும்போது ஈழத்தமிழருக்காக யாராவது பேசினால் தேசியப்பாதுகாப்பு சட்ட்த்தில் போடுகிறார். சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்.<br />தற்போதைய தேர்தல் தமிழ்நாட்டு தமிழர்களை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தேர்தலின் முக்கிய பிரச்சனையாக வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர் பிரச்சனையில் ஈழத்திற்கு ஆதரவாக யார் இருந்தார்கள் தற்போது யார் இருக்கிறார்கள் என்பதுதான். காலங்காலமாய் ஈழத்தமிழர் பிரச்சனையில் கவனம் செலுத்தி அதில் தன் பங்களிப்பை தந்து கொண்டிருப்பவர் கலைஞர் கருணாநிதி. அதற்காக அவர் செய்தவற்றை எல்லாம் அவரே பட்டியல் போட்டு காண்பித்திருக்கிறார். அண்மையில் விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது அதற்காக தான் ஒரு மாநில முதல்வர் என்னும் நிலை கடந்து இரங்கல் பா எழுதினார். அது மிகப்பெரிய தேசத்துரோகமாக செல்வி.ஜெயலலிதா அவர்களால் பேசப்பட்டது.ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்னும் கோரிக்கையும் ஜெயலலிதா அவர்களால் வைக்கப்பட்டது.<br />ஈழத்தில் மகிந்த ராசபக்சேவும் கோத்தபய ராசபக்சேவும் சேர்ந்து மாபெரும் இன அழிப்புப் போரை தொடர்ந்த போது தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. முத்துக்குமாரின் மரணமும் அவரின் கடிதமும் மாணவர்கள் வழக்கறிஞர்கள் மத்தியில் இப்பிரச்சனைக்குறித்த வீரியத்தை கூட்டின. தமிழ் திரைக்கலைஞர்கள் நட்த்திய ராமேசுவரம் பேரணியும் அதில் சீமான் ஆற்றிய உரையும் ஈழத்தமிழருக்கான ஆதரவினை தமிழர்கள் மத்தியில் வேகமாக்கின. வழக்கறிஞர்களின் போராட்டங்கள், மாணவர்களின் போராட்டங்கள் வேகமாயின.<br />தேர்தல் களமும் கொஞ்சம் கொஞ்சமாய் அமைந்தது.வழக்கமான அணி மாறலுக்கு தயாரானார் ராமதாசு. அதற்காக போர்நிறுத்தம் பற்றி பேசினார். போர்நிறுத்தம் செய்ய என்னவெல்லாம் திமுக செய்யவேண்டும் என்று கருதினாரோ அதையெல்லாம் பாமக வும் செய்ய வேண்டும் என்பதை லாவகமாக மறந்து கருணாநிதியை தாக்க ஆரம்பித்தார். விடுதலைச் சிறுத்தைகள் ராம தாசை மனப்பூர்வமாக நம்பியது. அவர் பேச்சைக்கேட்டு உண்ணாவிரதத்தைக் கூட முடித்துக்கொண்டார் திருமாவளவன். தா. பாண்டியன் போன்றவர்கள் அதிமுக கூட்டணிக்கு தாவ தயாராய் இருந்தனர். ராமதாசும் தயாராகிவிட்டார் என்று அவரின் நடவடிக்கைகள் காட்டின.<br />இந்த நேரத்தில் ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழர் குறித்து உதிர்த்தவை முக்கியமானவை. அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகின்றனரே என்றால் போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுதான் ஆவார்கள் என்றார். ஈழம் என்னும் ஒரு வார்த்தையே இல்லை என்றும் அவர்கள் ஈழத்தமிழர்கள் அல்ல இலங்கைத்தமிழர்கள் என்றும் முழக்கினார்.<br />ஈழ ஆதரவு தலைவர்கள் இரண்டு அணிகளாய் பிரிந்தனர். ஒரு அணி அதிமுகவுடன் மற்றொன்று திமுகவுடன். தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்சனைய முக்கியமாக தமிழர்கள் அடையாளம் காண்கிறார்கள் என்று ஜெயலலிதாவுக்குச் சொல்லப்பட்டு தன் நிலைப்பாட்டிலிருந்து மாறுகிறார் ஜெயலலிதா. காங்கிரசுக்கூட்டணிக்காக அவர் காத்திருந்த போது ஈழத்தமிழருக்கு எதிராகப் பேசினார். ராசபக்சேவின் தங்கையாகவே இருந்தார்.அதனால் ஈழத்தமிழருக்கு ஆதரவாக இருக்கிறார் கருணாநிதி என்று சோனியாவுக்கு ஞாபகப்படுத்தி ஆட்சியைக் கலைக்க கூட கோரினார். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது கருணாநிதியின் உள்ளம்தான். தன்னுடைய ஆட்சியைக்காப்பாற்றிக் கொள்ள வேண்டும் நினைத்தார். அதனால் தன்னுடைய நிலையிலிருந்து மாறவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். ஜெயலலிதா மிகவும் சரியாக இருப்பதாக காங்கிரசு தலைவர்களில் சிலபேர் பேசகூட ஆரம்பித்தனர். திருமாவளவனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேட்டார். அவர் கைது செய்ய சொன்ன சீமானை அப்போது கைது செய்திருந்த்து தமிழக அரசு. சட்டம் தன் கடமையினைச் செய்ய சொன்னார் தன்னுடைய கூட்டாளி வைகோவை கைது செய்தபோது. திருமாவளவன் கைது செய்யப்படாத்தற்கு என்ன காரணம் என்றார்.<br />ஆனால் தேர்தல் நெருங்கநெருங்க ஜெயலலிதா ஈழ எதிர்ப்பு என்னும் நிலையிலிருந்து மெல்ல மெல்ல தன் சாயத்தை மாற்ற ஆரம்பித்தார். தமிழகத்தின் தமிழர்கள் தங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்காக போராடுகிறார்கள் என்பதும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை அதற்காக அவர்கள் ஆயுதமாக மாற்றப் போகிறார்கள் என்பதை அறிந்து மாறுகிறார். காங்கிரஸ் கூட்டணி வேறு இல்லை என்றாகிவிட்ட நிலையில் அமைந்திருக்கும் கூட்டணியில் உள்ள தா.பாண்டியன் போன்றவர்கள் நிலைமையை எடுத்துச் சொல்ல ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த்தை நாடகம் என்று வர்ணித்த அவர் உண்ணாவிரதம் இருந்தார்.<br />இந்த நிலையில் திமுகவின் நிலையை நாம் மறக்க முடியாது. ஆட்சிக்காக அவர்கள் எப்படி பேசினாலும் அடிமனத்தில் தமிழுணர்வால் உந்தப்பட்டவர்கள். இந்திய அமைதிப்படை திரும்ப வந்தபோது அதை வரவேற்க நான் போகமாட்டேன் என்று சட்டசபையில் அறிவித்தவர் கருணாநிதி. அப்போதும் அவர் முதல்வர். அறுதிப் பெரும்பான்மையுடன் இருந்தார். இப்போது காங்கிரஸின் ஆதரவு அவர்க்கு தேவைப்படுகிறது. முதிர்வும் உடல்நலமும் அவரை மனரீதியாக மாற்றிவைத்திருக்கிறது. தனக்குப் பின் திமுகவும் தன்னுடைய பிள்ளைகளும் என்ன ஆவார்கள் என்னும் கவலை அவரை வாட்டுகிறது. அதனால் ஆட்சி தக்கவைக்கப்படவேண்டும் என்னும் சூழல் அவரை நெருக்குகிறது. அதனால் ஜெயலலிதா சொன்னவர்களயும் தங்கபாலு போன்ற காங்கிரசு தலைவர்கள் சொன்னவர்களையும் கைது செய்ய வேண்டிய சூழலை உள்வாங்கிக் கொள்கிறார் அவர். தமிழர்களின் துரோகி என்னும் பட்டம் பின்னாலே வந்துக் கொண்டிருப்பதையும் அவரால் உணரமுடியாமல் இல்லை. அதற்காகவே ராமதாசு போன்றவர்கள் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் யாரென்றே தெரியாது என்று வேறு தமிழினத்தைக் காக்கக் கூடிய பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் கோ.க.மணி சொன்னார். ஒரு வார்த்தைக் கூட டில்லியில் அமைச்சராக வேலை பார்த்த சின்ன ராமதசு சொல்லவேயில்லை என்பது வேறு பிரச்சனை.<br />ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள காங்கிரசுடன் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் கருணாநிதி. அதனால் அவருக்கு தமிழர்களின் எதிர் இருப்பு என்பது இந்த தேர்தலில் கிடைத்து இருக்கின்றது.தேர்தலுக்குப் பிறகு காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சியைக் கலைத்துவிட்டால் என்ன செய்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டும் அவர். ஆனால் காலமெல்லாம் அவர் ஈழத்தமிழரின் ஆதரவாளர். தனி ஈழம் குறித்த அக்கறை உள்ளவர். இல்லை என்று யாராலும் மறுக்க முடியாது. <br />ஜெயலலிதா அவர்கள் அவருடைய தலைவர் எம்ஜிஆர் அவர்கள் விடுதலைப் புலிகளின் ஆத்ம நேசிப்புக்கு உரியவர் என்பதையும் மறந்து விட்டு ஈழத்தமிழர்களை கொல்வதற்கு ஆதரவாக இருந்தவர். இந்த தேர்தலை முன்னிட்டு இப்படி ஒரு ஈழத்தமிழர் ஆதரவு நிலை எடுத்து இருக்கிறார். இது வரவேற்க வேண்டியது தான். தமிழர்களின் பெரும்பான்மையாய் உள்ள மிகப்பெரிய கட்சி அதிமுக. அதன் தலைமை தமிழர்களுக்கு எதிராக இருப்பது என்பது வருத்தமானதாகவே இருந்தது. ஆனால் இந்த மாறுதல் என்பது கொள்கைப் பூர்வமானதா என்பதுதான் நம் கேள்வி.ஸ்ரீஸ்ரீ ரவிச்சந்திர சுவாமிகள் கொடுத்த குறுந்தகடுகளைப் பார்த்தபின் தான் மாறிவிட்டேன் என்று அவர் சொல்வதுதான் இன்னும் மோசமானதாக இருக்கிறது. தமிழர்கள் இவ்வளவு துன்பப்படுகிறார்கள் என்பது எனக்கு இப்போதுதான் தெரியும் என்றும் அவர் கூறியிருக்கின்றார். இது குறித்து நாம் வினவ வேண்டியிருக்கிறது. இதுவரை துன்பப்படும் தமிழர்கள் குறித்து ஒரு செய்தியையும் ஜெயலலிதா படிக்கவோ பார்க்கவோ இல்லையா? அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று இங்குள்ள தலைவர்கள் சொன்னபோது அப்படியா உண்மையாகவா என்று எதையும் ஆராயமலோ அல்லது தெரிந்துக் கொள்ள முயலாமலோ எப்படி அரசியல் பணியாற்ற முடியும்? அதற்காக பேசியவர்களை, போராடியவர்களை கைது செய்ய சொன்னதெல்லாம் எதையும் அறியாமலேதான் சொன்னீர்களா?<br /><br />போர் நிறுத்தம் வேண்டும் என்று அனைவரும் கேட்டபோது இலங்கை என்பது வேறொரு நாடு அதன் உள்நாட்டு விவகாரத்தில் எப்படி நாம் தலையிடுவது என்று மத்திய காங்கிரசு மந்திரி சொல்வதைப் போலவே பேசிய ஜெயலலிதா இப்போது தனி ஈழம் அமைத்துக் கொடுப்பேன் என்று கூறுகிறார். இது சாத்தியமா? ஜெயலலிதா சொன்னால் எல்லாம் சாத்தியம் தான். உதாரணம் வேறு காட்டினார். காட்டுக் கொள்ளையன் வீரப்பனை பிடித்துக் காட்டுவேன் என்று கூறினேன் பிடித்துக் காட்டினேனா இல்லையா? என்றார். அந்த உரையைத் தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்கு ராமதாசும் என்னுடைய நண்பர் சந்தனக்காடு என்னும் மிகச்சிறந்த தொடரை இயக்கிய கௌதமனும்தான் நினைவுக்கு வந்தனர். வீரப்பனை எப்படி காவல்துறை கொன்றது என்பதை உண்மை அறியும் குழுவாக சென்று கண்டுபிடித்தவர்கள் சொல்வார்கள்.ஆனால் வீரப்பனை தன்னுடைய தொலைக்காட்சிக்கு பயன்படுத்திக் கொண்ட ராமதாஸ் இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. வீரப்பனை விசாரிக்காமல் கொன்றது தவறு என்று தன்னுடைய சகோதரிக்கு சொல்லமாட்டார். ஏனென்றால் கூட்டணி தர்மத்தைப் பின்பற்றுவார். ஆனால் திமுக கூட்டணியில் இருந்தால் தின்ந்தோறும் அவருக்கு தீபாவளிதான்.<br />இது இருக்கட்டும் இன்னொரு அரசியல் கட்டுரையாக வரும் அது.ஆனால் ஜெயலலிதாவின் இன்னொரு கூற்றையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.தனி ஈழம் என்றுதான் சொன்னாராம். தனி நாடு என்று சொல்லவில்லையாம்.தனி நாடு அல்லாத தனி ஈழம் என்பது என்ன வைகோ விளக்குவதற்கு அவருக்கு நேரம் இருக்காது. விருதுநகரை அவர் வென்றாகவேண்டும்.<br />இப்படி தேர்தலுக்காக ஈழத்தமிழர் பிரச்சனையை முன்வைத்து அரசியலை நகர்த்துகிறார்கள் தமிழ்நாட்டுத்தலைவர்கள். இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் யார் வென்றாலும் பரவாயில்லை என்னும் இந்திய அரசியலை மறந்து உணர்ச்சிவசப்பட்டு பேசும் தமிழ் உணர்வாளர்களின் கூற்று.<br />தமிழர்கள் இந்த தேர்தலில் என்னதான் செய்ய வேண்டும்? கண்டிப்பாக காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட வேண்டும்.அதற்குரிய 16 தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது. இது போலி தேசியம் பேசுகின்ற அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும். ஆனால் அதே நேரத்தில் உண்மையான ஈழ மக்கள் நேசிப்பு, இடஒதுகீடு நிலைநிறுத்தப் பட, சமுக ஜனநாயகம் தழைக்க, பார்ப்பன ஆதிக்கத்தினை தலையெடுக்காமல் செய்ய வேண்டும் என்றால் மீதி இடங்களில்அதிமுகவின் மாற்று அணிதான் வெல்ல வேண்டும்.பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-21707590476372083582009-03-31T18:23:00.000-07:002009-03-31T18:26:14.797-07:00கூத்தும் கூத்து சார்ந்த கொடுமையும்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUREmc2QKkbkN_8gWo9OK5QbsKCQcfqHeL61Ym7jcZCv5O_D9Ijbm4IUb62huM-ASBu6g-Ql18R_5t-VdjQmvSfI2M3NB_w1ITZDNDk_3Y6gzab6nY64oCfcYMbkYLCaDFCYjIHO56x_c/s1600-h/5550.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5319528088436464930" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 210px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUREmc2QKkbkN_8gWo9OK5QbsKCQcfqHeL61Ym7jcZCv5O_D9Ijbm4IUb62huM-ASBu6g-Ql18R_5t-VdjQmvSfI2M3NB_w1ITZDNDk_3Y6gzab6nY64oCfcYMbkYLCaDFCYjIHO56x_c/s320/5550.jpg" border="0" /></a><br /><div><br />ஒரு வழியாக முடிந்தது போலிருக்கின்றது தொகுதி உடன்பாடுகள். திமுக அணியும் அதிமுக அணியும் முடிவுற்ற சூழல் நிலவுகிறது. வழக்கம் போல தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும்<br />சண்டைவிடும் வேலையை இரு கழகங்களும் செய்து முடித்திருக்கின்றன. அணி மாறி போட்டியிட மாட்டோம் என்று முழுமையாக ராமதாஸை நம்பிய திருமா தொகுதி மாறிக்கூட<br />போட்டியிடாத ராமதாஸின் தமிழ் தேசிய உணர்வினை இன்னும் நம்புவார் என்று நினைக்க முடியவில்லை. ஈழத்தமிழர் பிரச்சினையினை தேர்தல் பிரச்சினையாக வைக்க<br />இனி ஜெயலலிதாவை தவிர யாரும் இல்லை என்னும் நிலையைத்தான் உருவாக்கி வைத்திருக்கின்றனர். யாரிடம் தமிழர்கள் தங்கள் தேசிய உணர்வினை வெளிப்படுத்த வேண்டுமோ<br />அவர்கள் சொல்லுவதற்கு இனிமேல் கட்டுபட்டு நடப்பதாக உறுதிக்கூறிய பிறகுதான் அண்ணன் தங்கை பாசமே மலர்ந்திருக்கின்றது. கருணாநிதியிடம் இப்படி ஒரு உறுதியை<br />ராமதாஸ் தரவில்லையோ. சரி அடுத்த சட்டமன்ற தேர்தலில் மறக்காமல் கருணாநிதி ராமதாஸிடம் இவ்வுறுதிமொழியை வாங்கிவிடுவாராக.<br />அதிமுக கூட்டணியில் முதன்மைக் கூட்டாளியாக இருந்த மதிமுக இப்போது என்னவாக இருக்கின்றது? தாங்கள் கேட்ட எண்ணிக்கையில் சட்டமன்ற தொகுதிகளை திமுக தரவில்லை<br />என்பதற்காக கடந்த தேர்தலில் திமுக மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த வெட்டுருக்களைக்கூட மறந்துவிட்டு இரவோடிரவாக அதிமுக அன்புச்சகோதரியின் கூடாரத்திற்குப் போன<br />வைகோ இப்போது தன்மான உணர்ச்சியினை எங்கு வைப்பார்? இப்போதுதான் உள்ளே வந்த பாமக விற்கு ஏழு தொகுதிகள் ஒரு மக்களவை என்றும் எந்தெந்த தொகுதிகள்<br />என்றும் முடிவாக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் அண்ணனுக்கு தயாராக தட்டில் சீட்டுகளை வைத்திருக்கும் சகோதரிக்கு கூடவே இருந்த சின்ன அண்ணன் இன்னும்<br />போயஸ் தோட்ட சமையலறையின் வாசலில் நிற்பது தெரியாமலே இருக்கின்றது.சட்டமன்றத்தில் எதற்காக வருகிறோம் என்று தெரியாமலேயே அதிமுக உறுப்பினர்கள் வெளியே<br />வந்த உடனே அந்தக் கட்சி உறுப்பினர்களைப்போலவே வெளியே வந்த மதிமுகவுடன் இன்னும் பேச்சுவார்த்தையே முற்றுப்பெறவில்லை. கேட்பது எத்தனை கிடைப்பது எத்தனை என்பதனை<br />உணர்ச்சிப் பெருக்கோடு வைகோ சொல்வார் என எதிர்பார்க்கலாம்.<br />பொதுவுடைமை தோழர்கள் காங்கிரஸ் சீனாவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்திருப்பார்கள் என்றால் அவர்களுக்கு இந்தப் பிரச்சினையே கிடையாது. நந்திகிராமில்<br />விவசாயிகள் மீது அவர்கள் நடத்திய தாக்குதல்தான் நமக்கு ஞாபகம் வந்து தொலையுதே. அவர்களும் சீட்டுக்காகத்தான் இந்த ஆட்டத்தையும் ஆடுகிறார்கள்.அதுமட்டுமல்ல<br />எனக்கு திடீரென்று இப்போது இன்னொரு பிரச்சினை நினைவுக்கு வருகிறது. மதுரை உத்தபுரத்தில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவரை இடிப்பதற்காய் பாடாய் பட்டவர்கள்<br />அப்போது அதைகுறித்து எந்த ஒரு வார்த்தையும் சொல்லாத ஜெயலலிதா இப்போது எப்படி தோழர்களின் பிள்ளை சமூக எதிர்ப்பை அல்லது தலித் அல்லாத மக்களின்<br />எதிர்ப்பை தாங்கிக்கொள்வார்? தோழர்கள் இதைகுறித்து எதுவும் பேச மாட்டார்கள் என்று கருதுகிறேன். இருக்கட்டும்.<br />திமுக கூட்டணி திமுக 21 காங்கிரஸ் 16 விடுதலைச் சிறுத்தைகள் 2 முஸ்லிம் லீக் 1. பீகாரில் காங்கிரஸுக்கு ஒதுக்கப் பட்ட இடங்கள் வெறும் மூன்று. முக்கிய மந்திரியாக<br />மத்திய அரசில் அங்கம் வகித்த லாலு ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் காங்கிரஸின் பலத்தை தீர்மானித்து தந்தவை. 80 இடங்கள் உள்ள உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ்<br />கட்சி ஆட்சியிலிருந்து இறங்காவண்ணம் காத்த கண்ண பரமாத்மா முலாயம் சிங் தர முன்வந்ததோ வெறும் 15 இடம். வடமாநிலங்களிலேயே இவ்வளவு பலவீனப்பட்ட<br />காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 40க்கு 16 ஏன்? அவ்வளவு பலம் உள்ளதா காங்கிரஸ் கட்சி. எத்தனை பேர் இருக்கின்றார்களோ அத்தனைப்பேருக்கு ஒரு கோஷ்டி இருக்கின்றது<br />தொகுதிக்குப் பிறகு வேட்பாளர் தேர்வுக்குப்பின் பாருங்கள் காங்கிரஸ் வேட்பாளரை காங்கிரஸ் காரர்களே தொகுதிக்குகுள் விடமாட்டார்கள். அத்தகைய ஒற்றுமை வலிமை<br />கொண்டது. கட்சிக்குள்ளே ஒற்றுமையில்லாத காங்கிரஸ் நாட்டு ஒற்றுமைப் பற்றி என்ன செய்யமுடியும்? அதுவும் தமிழ்நாட்டில் தனித்து காங்கிரஸ் நிற்குமே என்றால்<br />கட்டுத்தொகையினை இழக்கும் கட்டாயம் அதற்கு வரும். அப்படியிருக்க ஏன் இத்தனை இடங்களை திமுக ஒதுக்கவேண்டும். தன்னுடைய ஆட்சியைக் காக்க பலமில்லாத<br />காங்கிரஸுக்கு இப்படி வாரி தருவது எப்படி நியாயம். தன்னுடைய பலத்தை விட காங்கிரஸ் அதிக பதவி சுகத்தை அனுபவிப்பது தமிழகத்தில்தான். அதுவும் தமிழர்களின்<br />உணர்வுகளுக்கு எதிராக இருந்துக்கொண்டே.<br />தொண்டர் பலமுள்ள கட்சி என்று பார்த்தால் திமுக கூட்டணியில் அதற்கு அடுத்தபடியாக இருப்பது விடுதலைச் சிறுத்தைகள் தான். ஆனால் அதற்கு இரண்டே இடங்களைத்தாம்<br />ஒதுக்கியிருக்கிறார்கள். இதுகூட திருமாவளவனின் அளவு கடந்த பொறுமையினால் கிடைத்தது. அவரின் வழக்கமான உணர்ச்சிவசப்படும் தன்மையினை இந்த முறை<br />கொஞ்சம் ஒதுக்கிவைத்ததால் வந்தது. திருமாவளவனின் உண்ணாவிரதம் அவரை பொதுத்தலைமைக்கும் அதுமட்டுமல்ல தமிழ்தேசிய அரசியலை முன் இழுக்கும் தலைமையும்<br />அவருக்கு வந்து சேர்ந்தது. ஆனால் இந்த கூட்டணி அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ்தேசிய அரசியல் தொடங்கிய அவரின் போக்கு தலித்<br />தோழமைகளை இழந்து நிற்கிறது.கூடவே இருப்பார் என்று கருதப்பட்ட ராமதாஸ் இப்படி மீண்டும் தன் சுய சாதிக்குள்ளேயே அமுங்கிவிடுவார் என்பதை திருமாவளவன்<br />அறியவில்லை.<br />இத்தனை கூத்துகளும் அரங்கேறும் இடமாக தமிழக அரசியல் இருக்கின்றது. இதில் தமிழ் சார்ந்த அடையாளமோ தமிழ் அரசியலோ இல்லை என்பது தான் உண்மை. வேறு<br />எந்த தேசிய இனத்திற்கும் இல்லாத கொடுமை இது. தன் தேசிய தன்மை இல்லாமலே தங்களை ஆளுபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் அந்த இனம் பங்கேற்பது. </div>பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-88739913471722691442009-03-26T20:37:00.000-07:002009-03-26T20:37:10.112-07:00பறை: அரசியல் சதுரங்கம்:ஆட்டமிழக்கும் அறம்<a href="http://paraiyosai.blogspot.com/2009/03/blog-post_26.html#links">பறை: அரசியல் சதுரங்கம்:ஆட்டமிழக்கும் அறம்</a>பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-20677962015191089522009-03-26T20:29:00.000-07:002009-03-26T20:30:24.222-07:00அரசியல் சதுரங்கம்:ஆட்டமிழக்கும் அறம்பா.ம.க. தன்னுடைய பொதுக்குழுவில் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த முடிவை பெரிய ஜனநாயகத் தன்மையுடையதாகக் காட்டிக்கொண்டு ஓட்டுப்போட்டு அணி மாறியுள்ளது. மிகவும் தனித்தன்மையுடன் அல்லது ஆய்வின் அடிப்படையில் இயங்கும் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி தன்னை மாற்றிக்கொண்டு வருகிறது என்றா நம்பிக்கையினை அது மீண்டும் மண் போட்டு புதைத்துவிட்டது.<br />எந்த விதத்திலும் திமுகவின் தன்மைக்கு குறைந்ததல்ல அதிமுக. அதன் தலைமை அடிக்கும் அரசியல் கூத்துகளுக்கு ஈழத்தமிழர் பிரச்சனைக்கூட பொருட்டில்லைதான். இவ்வளவு நாள் எதிர் நிலையிலிருந்துவிட்டு தேர்தல் நெருங்க ஈழத்தமிழர் பிரச்சினை ஒரு வேளை தமிழர்களின் ஓட்டுகளை மாற்றிவிடுமோ என்று செயலலிதாவின் அரசியல் ஆலோசகர் ஒருவேளை அது தா.பா அல்லது வைகோ வாக கூட இருக்கலாம் சொல்லிவிட அவரும் ஈழத்தின் பிரச்சினை தீர மத்திய அரசை அவர் வழக்கமாக வசாடும் மாநில அரசைக் கண்டித்து ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து தன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.<br />ஈழத்தமிழர் பிரச்சினைதான் இந்த தேர்தலில் தமிழர்களால் முக்கியமானதாக முன்வைக்கப்படும் என்று யார் சொன்னார்கள்? தமிழர்கள் என்ன அவ்வளவு கொள்கைரீதியாக சிந்திக்க கூடியவர்களா? பாவம் அவர்கள். அதைத்தான் இவர்கள் எல்லாம் இலாவகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். எங்கிருந்து பேசினால் என்ன எதை பேசினால் என்ன எப்படி பேசினால் என்ன எல்லாம் ஓட்டுக்காகத்தான் என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் ராமதாஸ் நிறுவிவருகிறார். அவரின் தேர்தல் உத்தி என்று இதை யாராவது சொல்வார்களேயானால் அதற்கு வேறு ஏதாவது சொற்களைத்தான் தேட வேண்டும். காத்திரமாக அல்ல மிகவும் நிதானமாக அவதானித்தே இதைச் சொல்வோம். இவ்வளவு காலம் ஈழத்த்மிழர் பிரச்சினையில் மற்ற தமிழ்தேசிய தன்மையுள்ள இயக்கங்களுடன் கலந்து போராடி தமிழ் அடையாளத்துடன் உலகளவில் தன்னையும் தமிழர்களைக் காக்கும் தலைவராகக் காட்டிக்கொண்டு அரசியல் நடத்திய ராமதாஸ் இப்போது அதை மிகவும் லாவகமாக கைவிட்டார். பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்தி இதைச் செய்ததாக மக்களுக்கு அறிவிக்கிறார். என்ன இது? கட்சி மாறுவது என்பது ஏற்கெனவே எடுத்த முடிவு என்று மக்கள் தெரிந்து வைத்திருக்கின்ற ஒன்றை இவர் அறியாததைப் போலவே நடந்துகொள்வது என்பது நாடகமின்றி வேறென்ன இருக்க முடியும்.<br />காங்கிரஸை விட்டு அவர் வரவில்லை. திமுகவை விட்டுதான் வந்திருக்கிறார். பிரதமர் மன்மோகனுக்கும் சோனியாவிற்கும் கடந்த அய்ந்து ஆண்டுகளாக ஒத்துழைப்பு தந்தமைக்கு நன்றி கூறுகிறார். அப்படி கொடுக்கப்பட்ட ஒத்துழைப்பு என்பது பரஸ்பரமானது தானா? தமிழர்களுக்கு எதிரான ஆய்த நடவடிக்கைகளிலும் இந்த ஒத்துழைப்பு இருந்திருக்குமா? நாம் மிகவும் மதித்த ராமதாஸ் அவர்களுக்கு மட்டுந்தான் தெரியும் இது. தனக்கு கொடுக்கப்பட்ட வேலையினை செவ்வனே செய்வதற்கு இன உணர்வும் மான உணர்வும் தேவையில்லை. அடிமைத்தனம் இருந்தால் போதுமானது. டில்லியில் இருந்த ஒரு நாளில் கூட ஈழத்தமிழருக்காக அன்புமணி ஒரு போராட்டத்தையும் மத்திய அரசை எதிர்த்து நடத்தவில்லை. மாறாக நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும். பீகார் மக்கள் மும்பையில் தாக்கப்பட்டபோது லாலு அவர்கள் செய்த கிளர்ச்சியினை நாம் சிந்திக்க வேண்டும். அதுமட்டுமல்ல காங்கிரஸின் அநீதியைக் கண்டித்து இந்த கூட்டணியில் இடம் பெறவில்லை பாமக. திமுகவைவிட எந்த விதத்தில் அதிமுக நல்லது என்பதையும் தமிழருக்கு சொல்லி அதன் மூலம் அந்த கூட்டணியில் இடம் பிடிக்கவில்லை. சரி, ஈழத்தமிழர் பிரச்சினையை முன்வைத்தா? அல்லது சேது சமுத்திர திட்டத்தினை முன்வைத்தா?அல்லது உயர் மருத்துவம் தொழில்நுட்ப படிப்புகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டபோது அதை எதிர்த்து பாமக நடத்திய போராட்டத்திற்கு செயலலிதா ஆதரவு தந்தார் என்பதற்காகவா?<br />எதுவுமே மருத்துவர் ராமதாஸுக்கோ அல்லது அக்கட்சியின் முன்னணியினருக்கோ தெரியாது.பிறகு எப்படி என்கிறீர்களா? பொதுக்குழுவில் அவருடைய கட்சியினர் ஓட்டு போட்டனர் அதனால்தான்.<br />இங்கே தான் நமக்கு சந்தேகமே ஆரம்பமாகிறது. சந்தேகமே இல்லாமல் அது மார்க்ஸ் சொன்ன சந்தேகம் தான். பாமக என்பது இன்னும் முழுமையான பொதுவான கட்சியாக இல்லை. அப்படி பொதுவான கட்சியாக இருக்கும் பட்சத்தில் அதன் பொதுக்குழுவில் ஓட்டளித்தவர்கள் எத்தனைப்பேர் வேறு சாதியினர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் அற்ற காலங்களில் அவர் பொதுவான தமிழர்களை வைத்துக் கொள்வார். அதற்கு அத்தாட்சியாக ஒரு தொலைக்காட்சியும் செய்தித்தாளும் இருக்கும். அதில் தமிழ் தேசியவாதிகள் தமிழ் அறிஞர்கள் பனியாளர்களாக இருப்பார்கள். இசை குறித்தும் தமிழ் வளர்ச்சிக் குறித்தும் ஊடக வளர்ச்சிக்குறித்தும் படைப்பாளிகள் சங்கம் குறித்தும் தன்னுடைய ஊடகத்திற்கு போதுமான விளம்பரம் பெறுவது குறித்தும் பெரிதும் அவர் விவாதிப்பார். கல்வி குறித்து விவாதிக்க கல்வியாளர்களையும் அழைப்பார். உண்ணாவிரதம் இருந்து திருமாவளவன் போராடினால் ஓடிவந்து குளிர்பானம் கொடுத்து அவருடைய போராட்டத்தை முனைமழுங்க செய்வார். இதெல்லாம் செய்துவிட்டு தேர்தல் என்று வந்தால் இவர்களிடையே கருத்துக்களைக் கேட்காமல் தன் கட்சியின் பொதுக்குழுவில் தஞ்சம் அடைவார். அவர்கள்தான் வேலை செய்யப்போகிறவர்கள். யார் அவர்கள் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல சாதிக்காரர்கள். தன்னுடைய சாதி என்னும் குறுகிய வட்டத்திற்குள் அவர் சென்றுவிடுவது வாடிக்கையாக இருக்காது. அது வழக்கமானது. தமிழ் அறிஞப் பணியாளர்கள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.<br />ஈழப்பிரச்சினையில் கருணாநிதிக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கின்றதோ அவ்வளவு பொறுப்பு ராமதாஸுக்கும்தான் இருக்கிறது. அதிகாரத்தின் போதையை கடைசி சொட்டுமட்டும் சுவைத்து விட்டு இன்று பரிசுத்த ஆவியால் துடைக்கப் பட்டவர்களைப் போல அவர்கள் மாறியிருக்கிறார்கள். தமிழருக்கும்,தமிழ்தேசியத்திற்கும் பகுத்தறிவுக்கும் எவ்வளவு காங்கிரஸ் விரோதியோ அதைவிட பன்மடங்கு விரோதி செயலலிதா.அவரின் இந்துத்த தன்மை வெளிப்ப்டையானது. யாருக்கும் எதற்கும் அஞ்சாதது. அடுத்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஒரு வேளை பாஜகவுக்கு வருமேயானால் இப்போது கூட இருக்கும் நட்புகளை விட்டுவிட்டு சென்று விடுவதற்கு அவருக்கு தயக்கமே இருக்காது. எங்கே பிராமணன் என்று சோவை விட்டு ஜெயா தொலைக்காட்சியில் வருவது இன்னும் சில நாட்களில் மக்கள் தொலைக்காட்சியில் வந்தால் பாவம் தமிழ்ப்பண்ணையில் சந்திப்பிழைகளுக்கெல்லாம் சண்டை போடும் நன்னர்கள் என்ன செய்வார்களோ?இதைவிட முக்கியமான அக்கறை நமக்கொன்று உண்டு திருமாவளவன் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதுதான் அது.பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-50852819457499835212009-03-21T06:28:00.000-07:002009-03-21T06:28:49.189-07:00பறை: சினிமாவின் அரசியல்<a href="http://paraiyosai.blogspot.com/2009/03/blog-post_19.html#links">பறை: சினிமாவின் அரசியல்</a>பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-85455614890024619652009-03-19T11:31:00.001-07:002009-03-19T11:36:57.865-07:00சினிமாவின் அரசியல்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEht-73Tilgv93OaSyNado8Z4pFI9AH2MC96iRqTkWWaK8uREV0kWU3qJz99iEAgzHbVekc8h5dNCSt6UYEcyyb95RWgO6cC9LxQo-PK-LwxRiwEmZxpfNHkE8EZyMcBmKpsxtl3FSxAkrQ/s1600-h/Oil+painting.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5314969522916626210" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 198px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEht-73Tilgv93OaSyNado8Z4pFI9AH2MC96iRqTkWWaK8uREV0kWU3qJz99iEAgzHbVekc8h5dNCSt6UYEcyyb95RWgO6cC9LxQo-PK-LwxRiwEmZxpfNHkE8EZyMcBmKpsxtl3FSxAkrQ/s320/Oil+painting.jpg" border="0" /></a><br /><div align="justify">தமிழகத்தின் வரலாற்றை பிற்காலங்களில் எழுதக்கூடியவர்கள் அதற்கும் திரைபடத்திற்கும் உள்ள தொடர்பை எழுதாமல் நிறைவு செய்ய முடியாது. ஒரு மொழியின் இலக்கிய படைப்புகளிலிருந்து அதனோடு ஒட்டிய சமூக வரலாற்றையும் நம்மால் அறிய முடியும். ஆனால் இங்கே வரலாறு என்பது வேறாகவும் மொழி மற்றும் அதன் படைப்புகள் என்பவை வேறாகவும் இருக்கிறது. படித்தலினால் கிடைக்கும் அனுபவம் என்பது பார்த்தலின்போது வேறு வடிவமாக உறுதியானதாக வாசகன்/பார்வையாளன் மனத்தில் தங்குகிறது. இந்த அளவுகோலின் அடிப்படையில் மட்டுமில்லாமல் சமுகவரலாற்றோடு திரைப்படங்களுக்கு இருக்கும் இயைபும் அல்லது முரணும் அவை நமக்குள் நிகழ்த்தும் சலனங்களின் தன்மையிலும் நாம் சினிமாவை அனுகவேண்டியிருக்கிறது.இலக்கியம் சார்ந்து அல்லது திரைசார்ந்து வரும் ஊடகங்கள் உலகத்தின் பல்வேறு மொழிகளில் வரக்கூடிய சிறந்த திரைப்படங்களை ஆராதிப்பது அல்லது அவற்றின் தரம் பற்றிய உரையாடல்களை உருவாக்குவது என்பவை போன்றுதான் வினையாற்றுகின்றன. அதுமட்டுமில்லாமல் அகிராகுரோசா அல்லது இந்திய அளவில் சத்தியஜித்ரே மிருணாள் சென் என்றுதான் படைப்புகளை உருவாக்குகின்றன. திரைப்படப் பயிற்சிப் பட்டறைகள் இந்தவகையிலேயே நடத்தப்படுபவனாக இருக்கின்றன. உலக திரைப்படங்களையும் சில குறும்படங்களையும் வைத்துக்கொண்டே அவை ஒப்பேற்றப்படுகின்றன என்று சொல்லலாம்.வெகுமக்கள் சினிமாகவாக அறியப்படும் சினிமா சம்பந்தமான உரையாடல்கள் வெறுமனே திரை விமர்சனம் என்னும் பெயரில்தான் தமிழ் ஊடகங்களில் நடத்தப்படுகின்றன. மாற்றுத் திரைப்படங்களில் செலுத்தப்படும் கவனம் மக்களை நேரிடையாக சென்றடையும் வியாபாரச் சினிமாக்களை குறிவைப்பதில்லை. இதனால்தான் தமிழ்சினிமா என்பது இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு ஒட்டுமொத்த வடிவத்தைப் பெற்று இருக்கிறது.உலகமயமாக்கல் சூழலில் செல்லுலாயிடில் சொல்லப்படும் கலைகள் கூட உலகமயமாக்கப் பட்டபின் அந்ததந்த இன மக்களின் திரைப்படங்கள் என்ற வட்டத்திலிருந்து விலகி உலக சந்தையை மனதில்கொண்டு காட்சி அமைப்புகள்,பாத்திரங்களின் செதுக்கல், உணவு வகைகள், உரையாடல்கள் (சில தமிழ்ப்படங்களில் ஆங்கிலப் படங்களைவிட அதிகமான ஆங்கில வசனங்கள் இருக்கும்) ஆகியவை அமைக்கப்படுகின்றன. படத்திற்கே கொஞ்சமும் தொடர்பேயில்லாத ஒரு சூழலில் எங்கோ ஒரு வெளிநாட்டில் நம்முடைய கதாபாத்திரங்கள் நடனமாடிக்கொண்டிருக்கின்றன.ஆனால் பின் காலனிய அரசியல் பின்புலத்தோடு 1930களுக்குப் பின் பேசும்படங்கள் உருவாக்கப்பட்ட பின் நம்முடைய திரைப்படங்கள் சமுகத்தின் முக்கிய பங்காளியாக மாறி இருக்கின்றன. ஆரம்ப காலங்களில் புராணங்களை சுட்டு தள்ளிய இந்திய கேமிராக்களின் தாக்கம் தமிழையும் விட்டு வைக்கவில்லை. வெளிநாடுகளில் அக்காலங்களில் இந்தி மற்றும் இந்துத்துவ தன்மையுள்ள படங்களே இந்திய திரைப்படங்களாக அறியப்பட்டிருக்கின்றன. இதிலிருந்தே தமிழ் திரைப்படங்களின் அணுகுமுறை தொடங்கியிருக்கின்றன. பேசும்படங்கள் வந்தபின் மட்டுமே தமிழ் சினிமா என்ற வகைமை உருவானது. அதுவரை அது இந்திய தேசிய சினிமாகவே இருந்தது. ஆனால் தமிழின் மிகப்பழைமையான இலக்கியத்தொன்மையின் நிழலிருந்து நம் படங்கள் தொடங்கியிருக்குமேயானால் மிகச்சீர்பட்ட வெகுமக்கள் திரைப்படங்கள் தமிழில் உருவாகியிருக்க நிறைய வாய்ப்புகள் இருந்திருக்கும். சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற பெரும் காப்பியங்களிலிருந்தும் அக இலக்கியங்களிலிருந்தும் தமிழ் சினிமா வேர் கொண்டிருந்திருந்தால் அதன் திசை உலக சினிமா என்ற தளத்தை அடைந்திருக்கும். மாறாக இந்தியாவின் புராணங்களான ராமாயாணம், மகாபாரதத்திலிருந்தே திரைப்படங்கள் உருவானதால்தான் மூடநம்பிக்கைகள் நிறைந்த அல்லது சமுக யதார்த்தத்தின் எதிர்நிலைப் படங்களே இங்கே குவிக்கப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகான அரசியல் மாற்றங்கள் இந்திய தேசிய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் மேற்கொள்ளப்பட்ட போதுதான் தமிழ் வெகுமக்கள் சினிமா என்பது அரசியல் கருத்துடன் புலப்பட ஆரம்பித்தது. அதன் நீட்சி 1970 களின் இறுதிவரை தென்பட்டது, இந்தியை இந்தியாவின் ஒரே மொழியாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது தமிழகத்தில் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்கமானது சுயமரியாதை மற்றும் இனவாரியான பிரதிநிதித்துவம் ஆகியவற்றை பேசிக்கொண்டிருந்த வேளையில் மொழி ஒரு அரசியல் ஆயுதமானது. தமிழ் தேசிய பிரகடனம் அதைத் தொடர்ந்து பெரியார் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு ஆகியவை தமிழ் சினிமாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியத்தன்மையை பேசி வந்த சினிமா தமிழ் இயக்கங்களின் குறிப்பாக திராவிட இயக்கங்களின் கொள்கையைப் பின்பற்றி இயங்கத்தொடங்கின. திரைப்படங்களின் பெயர்கள் , கதைப்பாத்திரங்களின் பெயர்கள் ஆகியவையும் அரசியலுடன் கலந்ததாகவே இருந்தன. 1970 எழுபதுகளில் தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவற்றின் மூலம் பெரும் மக்கள் சந்திப்பை நிகழ்த்த முடியும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆழமாக நம்பியது. அதன் முதல் தலைவரான அண்ணா அவர்கள் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.'சென்சார் இல்லாமல் ஒரு படத்திற்கு அரசு அனுமதி தருமேயானால் ஒரே படத்தில் ஆட்சியைப் பிடித்துவிடுவேன்' என்றார். அதனால்தான் இயற்கையாகவே மொழி அறிவும் பிரதிகளின் பலமும் உள்ள திராவிட இயக்கங்களின் தலைவர்கள் சினிமாவை தன் அண்ணன் வழியில் கைப்பற்றினர்.கதைகளிலும் வசனங்களிலும் தற்போதைய முதல்வர் கருணாநிதி கோலோச்ச நடிப்பிலும் நாயகத்தன்மையிலும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.ஆண்டார். இன்னும் சில நடிகர்கள் அரசியல் ஈடுபாடு கொண்டு திமுக வில் இணைய திமுக நடிகர்களையும் அவர்களின் ரசிகர்களையும் பயன்படுத்திக்கொண்டது. அண்ணாவின் இதயக்கனியானார் எம்.ஜி.ஆர். 'தம்பி உன் முகத்தைக் காட்டு; ஒரு லட்சம் ஓட்டு' என்று அண்ணாவால் வேண்டுகோள் விடப்பட்டவரானார். அண்ணாவின் மறைவுக்குப்பின் திமுக பிளவுபட்டது. எந்த சினிமா திமுகவின் வளர்ச்சிக்கு தேவைப்பட்டதோ அதே சினிமா தான் எம்ஜிஆரின் அதிமுக வுக்கும் பயன்பட்டது. அவர் மறையும் வரை அவரே முதல்வராக இருந்தார். கர்மவீரர் என்று போற்றப்படும் காமராஜர் தன்னுடைய பொதுவாழ்வில் தூய்மையானவர் என்று பெயர் பெற்றவர். 'நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்' என்று கூறிய அவரை தமிழக மக்கள் தோற்கடித்தனர். ஆனால் உண்மையிலே உடல்நிலை சரியில்லாத காலத்தில் அமெரிக்காவில் இருந்தபடியே எம்ஜிஆரால் வெற்றிப்பெற முடிந்தது என்றால் திராவிட இயக்கங்கள் எத்தகு வலுவோடு சினிமாவை தனக்கானதாகப் பயன்படுத்திக்கொண்டன என்பதை அறிவது மிக எளிது. இத்தகைய போக்கால் உண்மையான சினிமா வடிவம் தமிழர்களுக்கு அறிமுகமாகாமல் அல்லது அத்தகைய படங்களை ரசிக்கும் மனோபாவமே இல்லாமல் தமிழ் ரசிகன் தடுக்கப்பட்டான். அப்படி ஏதாதவது கலைத்தன்மையுள்ள படம் வருமே என்றால் அது 'கலைப் படம்' என்றும் முத்திரைக்குத்தப்பட்டு புதிய சினிமா வகை ஒன்று உருவானது 'வியாபார சினிமா'. இதைப் பார்ப்பவர்கள் அதைப் பார்க்கமாட்டார்கள் அதைப் பார்ப்பவர்கள் இதைப்பார்க்க மாட்டார்கள் அதே போலத்தான் படமெடுப்பவர்களும். மொத்தமாக சினிமா என்பதன் உண்மையான பொருள் என்னவென்றே அறியப்படாமல் போனது. இன்னொரு மோசமான விளைவைக்கூட நாம் அனுபவிக்கிறோம். ‘நாயக வழிப்பாடு' இன்றைக்கும் முதல்வராகும் கனவோடு கோடம்பாக்கத்தில் எத்தனைப் பேர் அலைகிறார்கள் என்று யாருக்குத் தெரியும்? சமுக அரசியல் தளத்தின் பிரதிமை ஏதாவது தற்கால வெகுமக்கள் சினிமாவில் தெரிகிறதா என்றால் இல்லை. வரும் ஒருசில படங்களைத்தவிர்த்து பார்த்தால் அதே ஒற்றைத்தனமாக கதை நாயகன் கோபப்படுவதும் அதற்காக எதிரிகளை துவம்சம் செய்வதும் அதற்காக கையில் ஒரு சூலாயுதம் நெற்றியில் பெருவிரலால் மேல் நோக்கி இழுக்கப்பட்ட குங்குமப்பொட்டு என புறப்படுவதும் என்று இந்துத்துவ மனநிலையை விரிக்கின்றவையாக இருக்கின்றன. தலித் அரசியல், தலித் இலக்கியம் என தளங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை நிறுவி இருக்கின்ற இந்தத் தருணத்தில் தலித் சினிமா என்ற பேச்சே இன்னும் எழவில்லை. தலித் மக்கள் சம கால திரைப்படங்களில் காட்டப்படுவது குறித்தும் நாம் பேசவேண்டியிருக்கிறது. வீதி கூட்டுபவர்கள், மலம் அள்ளுபவர்கள் என்று ‘காமெடி'க்காக பயன்படுத்தப்படுவர்களாகவே அவர்கள் சித்தரிக்கப்படுகின்றனர். ஒரு சேரிக்குள் சென்ற விவேக் அங்கே வாழுகின்ற மக்களை நையாண்டி செய்வதும் அவர்கல் மேல் துர்நாற்றம் வீசுகிறது என்பதும், எவ்வளவு சொன்னாலும் அந்த வடிவேல் ‘சண்டாளா' என்ற சொல்லை வசவு சொல்லாகவே இன்னும் பயன்படுத்துகிறார் என்பதும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. வியாபாரத்தை முன்வைத்து தயாரிக்கின்ற படமாக இருந்தாலும் இன்றைக்கும் தொழில் நுட்பங்கள் மிகைந்துள்ள போதும் திரையரங்கிற்குச் சென்று படம் பார்ப்பவர்கள் பெரும்பான்மையானவர்கள் தலித்துகளேயாவார்.அதுமட்டுமல்ல அனைத்துக் கதாநாயகர்களுக்கும் வண்ணக்காகிதம் முதல் பெரிய பெரிய நட்சத்திரங்களைக் கட்டுபவர்களும் இவர்கள்தான். இவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படங்கள் எதுவும் தமிழில் சரியாக வரவில்லை.இதே போன்று இன்னொன்றையும் நாம் நோக்க வேண்டும். தமிழில் குழந்தைக்களுக்கான திரைப்படங்களின் நிலை என்ன? குழந்தைகள் இன்றைய திரைப்படங்களைப் பார்த்தே சாதி,மதம், வன்முறை போன்றவற்றைக் கற்றுக்கொள்கின்றனர். குழந்தைகளின் உலகத்தை தேடுகின்ற படங்கள் எதுவுமே இங்கு வரலில்லை. பெரியவர்களுக்கான படமாக எடுக்கப்படுவதையே அவார்களுக்கானதாகவும் கருதிக்கொள்வதால் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.எங்கள் கிராமத்தில் ஒன்பதாவது படிக்கின்ற மாணவன் தன்னுடைய பாட்டி செத்துப்போன துக்கத்தை கொண்டாடும் பொருட்டு அருகிலுள்ள மதுக்கடையில் பீர் ஒன்றை வாங்கி தன் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்டு துக்கத்தைப் போக்கியிருக்கிறான் என்றால் அந்தக் காட்சி படிமம் எப்படி அவன் மனதுக்குள் பதிந்தது? தற்போது இருக்கிற திரைப்படங்களே அதற்கு முதல் காரணியாக இருக்கமுடியும் என்பதுதான் பதிலாக இருக்கமுடியும். சில திரைப்படங்களிலே பாடல் காட்சிகளில் காட்டப்படும் குழந்தைக்காதல் பள்ளிகளில் காதல் புரிவதற்கு மாணவர்களுக்கு உந்துதலை தந்து இருக்கின்றன.இருப்பினும் சில நல்ல படங்களும் அவ்வப்போது தலைக்காட்டாமல் இல்லை. மொழி, பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம்,தனம்,ராமன் தேடிய சீதை ஆகியவை வாழ்வையும் களத்தையும் வெளிப்படுத்தக்கூடிய படங்களாக அமைந்திருக்கின்றன. தற்போதைய இயக்குனர்களும் முன்பு போலில்லாமல் மிக்க வாசிப்பு அனுபவமும் வரலாற்று அறிவோடும், மண்ணோடு தொடர்புடையவர்களாகவும் வந்திருக்கின்றனர். எனவே மாற்று சினிமா என்ற சொல்லாடலின் இறுக்கத்தில் நம்மால் வெகுமக்கள் சினிமாவைப் புறந்தள்ள முடியாது. வெகுமக்களுக்கானதை உண்மையாகவே மக்களுக்கானதாக மாற்றுவோம்.விளிம்பிலிருந்து மையத்தை நோக்கி என்ற இலக்கியக் கோட்பாடு சினிமாவிலும் செல்லுபடியாகும். </div>பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-6220266082169878622009-03-15T11:29:00.000-07:002009-03-15T11:34:34.616-07:00<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV9XofoZLRNnE2vzGsLlNxl01GrCGFq-DKvlB6WhUXVeFUN73Uk3nmSn7dWMoVVrl9SkRoL8580IOATJ4EJil_BQptNRqeKXJi4eDeaD5Nk-USmasJWyafCJSm2HVsK0Y_hCwwcxrJyUk/s1600-h/Nagore_Rumi.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5313484674341776514" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 149px; CURSOR: hand; HEIGHT: 166px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV9XofoZLRNnE2vzGsLlNxl01GrCGFq-DKvlB6WhUXVeFUN73Uk3nmSn7dWMoVVrl9SkRoL8580IOATJ4EJil_BQptNRqeKXJi4eDeaD5Nk-USmasJWyafCJSm2HVsK0Y_hCwwcxrJyUk/s320/Nagore_Rumi.jpg" border="0" /></a><br /><div></div>என்னுடைய கடந்த பதிவு டிசம்பரில் ஏற்றப்பட்டது. அதற்குப் பிறகு எழுதுவதற்கு நிறைய செய்திகள் கைவசம் இருக்கிறது. ஆனாலும் சொல்லமுடியாத மனத்தடை என்னை ஒருவகையில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு ‘சோம்பேறித்தனம்’ என்று நீங்கள் பெயர் வைப்பீர்களானால் அதை மறுக்க என்னால் முடியாது. இனிமேல் தொடர்ந்து எழுதவேண்டும் என்னும் எண்ணத்துடன் இருக்கிறேன். ‘அய்யா எப்படிங்கய்யா தொடர்ந்து எழுதறது?’ என்று எதேச்சையாக எழுத்தாளர் நாகூர் ரூமியிடம் கேட்டேன். என்னுடைய குரு ஸ்தானத்தில் அவரை வைத்திருக்கிறேன். அவர் மிகவும் சாதரணமாக ஒரு ரொட்டியைக் கிழித்து மீன் மசாலாவில் தொட்டுவிட்டு வாயில் போட்டுக்கொண்டே சொன்னார். ‘உக்கார்ந்து எழுதவேண்டும்’ ரூமியின் எழுத்தில் மட்டுமில்லை அவருடைய பேச்சிலும் இப்படி சாதாரணமாக வந்து விழும் நகைச்சுவை என்னை நிறைய சிந்திக்கவைத்து இருக்கின்றன. அவரின் அடுத்த வினாடி அப்படித்தான் தமிழ்வாசகர்களை சுண்டிவைத்திருக்கிறது. உட்கார்ந்து எழுதுவது என்பதின் ஆழ்ந்த பொருள் விளங்கும் என்று நினைக்கிறேன்.<br />ரூமியின் தொடர்ந்த நூல் வரிசையில் அடுத்து வந்து சேர்ந்திருக்கின்றது value education என்னும் புதிய ஆங்கில நூல். கல்லூரி பாட்திட்டத்தில் மதிப்பீட்டுக்கல்வியைப் பாடமாக வைத்து இருக்கிறார்கள். ஆனால் அதற்கு தேவையான பாடப்புத்தகம் எதுவும் இன்னும் சரியாக வரவில்லை. ஒருவேளை பாட்திட்டமே வகுக்கப்படாவில்லையோ என்னவோ தெரிய வில்லை. ஆனால் இந்த புத்தகம் அந்த தேவையை தீர்க்கிறது. அதன் பிரிவுகள் ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக உள்ளன. இந்த புத்தகம் கதவுகள் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வருகிறது.பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-34415571462415590522008-12-17T18:07:00.000-08:002008-12-17T18:08:36.233-08:00தமிழ் படைப்பாளிகளின் கவிதைப் போர் : காலத்தின் எழுத்து<div align="justify"><span style="font-size:85%;">காலத்தின் நீண்ட மௌனத்தை எறிந்து தங்கள் குரலைப் பதிவு செய்து இருக்கின்றனர் தமிழின் தீவிர படைப்பாளிகள். அரை நூற்றாண்டாய் துயரத்தின் மீது தகிக்கும் ஈழத்தமிழர்களின் இன்னல்கள் பதினேழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற தமிழர்களின் மனங்களில் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. தொடக்க காலங்களில் இலங்கையில் வெலிக்கடைச் சிறையில் அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட குட்டிமணி ஜெகன் மறைவுக்குப் பிறகு ஒரு பெரும் எழுச்சி ஈழத்தமிழர் பிரச்சனையில் இங்குள்ள தமிழருக்கு ஏற்பட்டது. அது தமிழக அரசியலில் ஒரு பகடைக்காயாக மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு தமிழ் தேசியம் பேசும் இயக்கங்கள் மட்டுமே ஈழப்பிரச்சனையில் தொடர் அக்கறையை செலுத்தி வந்தன என்றால் அது அவ்வளவு தவறில்லை. கொடுங்கனவாய் முடிந்துப் போன ராசீவ் காந்தி மரணத்துக்குப்பிறகு ஈழத்தமிழர் பிரச்சனைப் பற்றிப் பேசுவது அனேகமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது எனலாம்.<br />துன்பப்படும் மக்கள்துயரின் காத்திரத்தைப் பேசினால் கூட விடுதலைப் புலிகளின் ஆதரவாக அது மாற்றப்பட்டது. வைகோ,நெடுமாறன் போன்றோர் பேசியதற்காகவே நெடு நாளைய சிறை தண்டனையைப் பெற்றனர். பிறகான காலக்கட்டங்களில் எத்தனையோ அழிவுகளை சிங்கள பேரினவாத ராணுவம் தமிழ்மக்கள் மீது நடத்தியது. யாழ் நூலக அழித்தொழிப்பு,செம்மணி புதைகுழி,செஞ்சோலைக் குழந்தைகள் படுகொலை என்று பட்டிலிடமுடியாத எத்தனையோ அழிசெயல்களை இலங்கை ராணுவம் செய்தது. உலக அரங்கில் அதற்குப் பின் இப்போது ஈழத்தில் நடந்துவரும் கடும்போரில் தமிழருக்கு ஏற்பட்ட பேரிழப்புகள் எல்லாம் இங்குள்ளவர்களின் மனசாட்சியை உலுக்க திரண்டது மக்கள் எழுச்சி.ஒரு சில அரசியல் கட்சிகள் தவிர மற்றைய கட்சிகள் தமிழீழம் என்ற கருத்தி உடன்பாடில்லாத இடதுசாரிகள் கூட இந்த எழுச்சியில் பெரும் அக்கறைக் காட்டினர். தீவிரமாக அரசும் இதில் கவனம் செலுத்தியது. அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தி போர் நிறுத்தத்தை வேண்டி மத்திய அரசை வலியுறுத்தியது.<br />இந்நிலையில் தமிழ்த்திரையுலகின் போராட்டம் குறிப்பிடத்தக்கது.அக்டோபர் 19ந் தேதி ராமேஸ்வரத்தில் நடைப்பெற்ற திரை உலக போராட்டத்தில் ஏற்பட்ட எழுச்சி தமிழ் மக்கள் உள்ளத்தில் உள்ள அச்ச உணர்வினை நீக்கியது. இயக்குனர்கள் சீமான்,அமீர் போன்றோரின் வரலாற்று ரீதியான அரசியல் விரவிய உரை தமிழ் இளைஞர்கள் மட்டுமல்ல பொதுமக்கள் உள்ளத்திலும் பொதுவான அறத்தன்மையை ஏற்படுத்தியது. அதற்குப்பிறகான அனைத்துக் கட்சியின் தமிழர் சங்கிலிப் போராட்டம் கொட்டும் மழையில் 100 கி.மீ தூரத்திற்கு நடைபெற்றது.<br />தொடர்ந்துப் பல்வேறு மக்கள் அமைப்புகள் ஈழத்தமிழர்களின் ஆதரவுக்குரலை உயர்த்தியது.ஆனால் அறிவுலகம் எனப்படும் படைப்பாளிகள் அடர்ந்த மவுனத்தைக் கடைப்பிடித்தனர். பாப்லோ நெரூடா, மொகமத் தார்வீஷ் போன்றோரின் கவிதைகளையும் சேகுவேராவின் புரட்சியையும் சாவேசின் அமெரிக்க எதிர்ப்பையும் சிலாகித்து பத்திகளாக கட்டுரைகளாக எழுதிக்குவிக்கும் தமிழ் எழுத்துலகம் தலித்துகளின் மீதான வன்முறையானாலும் சரி வேறுஎந்த பிரச்சனையிலும் தன்னை உட்படுத்திக்கொள்ளாத எச்சரிக்கை உணர்வுடனேதான் இயங்கிவந்திருக்கிறது. 19 ஆண்டுகாலமாக தலித் மக்களைப் பிரித்துவைத்த உத்தபுரத்தின் சுவர் வெளிச்சத்திற்கு வந்தபின் எத்தனை தமிழ் படைப்பாளிகள் தங்கள் வருத்தத்தையோ கோபத்தையோ பதிவு செய்தனர்? கயர்லாஞ்சியின் கொடுமைக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டும் படைப்பாளிகள் ஒரு இயக்கமாகி ஏதும் சொல்லவில்லை.அதே போல ஒரிசா கர்நாடகாவில் கிறித்தவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை படைப்பாளிகள் அரங்கம் கண்டுகொள்ளவில்லை.<br />உலக அளவிலான வன்முறைகளயும் விடுதலைப்போராட்டங்களையும் மாங்கிமாங்கி எழுதும் நம் படைப்பாளிகள் நம் மொழியைப் பேசுகின்ற சொந்த சகோதரர்கள் துன்பப்படும்போது வாய்மூடி இருப்பதான கோரம் வேறு எதுவுமில்லை.<br />அதைத்தான் இக்கட்டுரையின் முதலில் சொல்லியிருந்தேன்.மவுனத்தைக் கலைத்த கவிஞர்கள் லீனா மணிமேகலைக்கும் சுகிர்தராணிக்கும் நன்றியைத் தெரிவிக்கலாம்.<br />இவர்கள் ஒருங்கிணைத்த தமிழ் படைப்பாளிகள் பங்கேற்ற கவிதைப் போராட்டம் சென்னை காந்தி சிலை அருகில் நடைப்பெற்றது. காவல்துறையின் அனுமதிப் பெறுவதற்கு பெரும்பாடு பட்டதாக அவர்கள் கூறியது தமிழ்நாட்டில் தமிழர்களாகத்தான் நாம் வாழுகிறோமோ என்ற அய்யத்தை எழுப்பியது. அதற்கான நிபந்தனைக் கடிதத்தையும் படித்தபோது அந்த உணர்வு இன்னும் மேலோங்கியது.<br />தமிழ் படைப்புத்தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் முக்கிய படைப்பாளிகள் அனைவரும் வந்திருந்தனர். ராமேசுவரத்திலிருந்தும் இன்னும் பல மூலைகளிலிருந்தும் படைப்பாளிகள் வந்திருந்தது சிறப்பு. எந்தவிதமான அறிக்கையோ சுவரொட்டியொ இல்லாமல் வெறுமனே தொலைபேசி, குறுஞ்செய்திகள் ஆகியன மூலமே தகவல் பரப்பப்பட்டு இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்குத் தலைமை என்று எந்த அரசியலும் இல்லாமல் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்று சனநாயகத்தன்மை இருந்தது படைப்பு நேர்மையைக் காட்டியது.<br />கனிமொழியும் தமிழச்சியும் மிகவும் தங்களுக்குரிய அரசியல் அதிகாரங்களைத் துறந்து படைப்பாளிகள் என்ற அடிப்படையில் இந்த நிகழ்வில் பங்காற்றியது அடுத்த தலைமுறை அரசியலின் போக்கை கணிக்கவைத்தது.<br />எழுத்தின் ஆங்காரத்தோடு ஒரு பயணியாக அறியப்படும் கோணங்கி நவீன கவிதைத் தளத்தில் மட்டுமே இயங்கக்கூடிய இன்னும் பிற கவிஞர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்றதும் குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமான கவிஞர்களும் எழுத்தாளர்களும் இந்த நிகழ்வில் பங்காற்றியது பெருமைக்குரியதும் பொறுப்பானதும் ஆகும்.</span></div>பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8498549291760466132.post-41232726746747742702008-12-02T10:13:00.001-08:002008-12-02T10:17:13.745-08:00கவிதை ஒலிக்கும் அரங்கம்<div align="justify"><br /><span style="font-size:85%;">நவீன தளத்தில் இயங்கக்கூடிய தமிழ் கவிஞர்கள் முதல் முறையாக சென்னையில் ஒரு கூடுகையை நடத்துகின்றனர். வெறுமனே பயிற்சி பட்டறைகளையும் குளிரூட்டப்பட்ட அறைகளில் கவிதைகளை வாசித்தும் நிகழும் நிகழ்ச்சியாக இல்லாமல் புது தளத்திலே இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல இந்த நிகழ்ச்சி<br />ஒருநாள் முழுக்க சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ளது. 100 கவிஞர்கள் கவிதைகளை வாசிக்கப்போகின்றனர். ஈழத்தில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் இனப்படுகொலையின் கோரத்தை அதன் கொடூர மனப்போக்கை மொழி இனம் தேசம் என்ற எல்லைகளைக்கடந்து மனிதர்கள் என்னும் அடிப்படையில் அங்கு போர் நிறுத்தம் நடைமுறைப்<br />படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. ஈழப்பிரச்சனையில் இந்தியா தலையிடக் கோரி பல்வேறு நிலைகளில் அரசியல் அரங்குகளில் தற்போது போராட்டங்கள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. திரையுலகினில் பல மட்டங்களில் இதற்கான போராட்டங்கள் நிகழ்ந்தன. அதுமட்டுமல்ல தங்களின் இனவுணர்வினால் அரசின் கெடுபிடிகளால் இயக்குனர்கள் சீமான்,அமீர் போன்றோர் கைது செய்யப்பட்டு இன்றுவரை வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் அறிவுச்சூழலிலிருந்து எந்தக் குரலும் இதற்காக ஒலிக்கவில்லை என்ற வெற்றிடம் நிரம்பியிருந்தது.<br />மொழியின் குழைவுகளிலும் அதன் தீராத சமவெளிகளிலும் தங்களைக் கட்டமைக்கிற படைப்பாளிகள் ஏன் இப்படி அமைதிக்காக்கின்றனர் என்ற கேள்வி வாசகத்தளத்திலும் இருந்துவந்தது. நடிகர்களுக்கு இருக்கும் உணர்வு வெளிப்பாட்டுத் தன்மை உணர்வுகளையே வாழ்வாகக் கொண்டு படைப்புக்கலனாகக் கொண்டு இயங்கும் தமிழ் படைப்பாளிகளுக்கு<br />இல்லையோ என்ற ஏக்கம் இருந்தது.<br />அந்த எதிர்ப்பார்பை நிறைவு செய்யும் வகையில் மட்டுமில்லை உள்ளப்பூர்வமாக படைப்பாளிகள் வெறும் காகிதத்தில் மட்டுமில்லை தேவையானால் களத்தில்கூட இறங்கக்கூடியவர்கள்<br />என்ற பொறுப்பினை உலகுக்கு எடுத்துக்காட்ட சில பெண் படைப்பாளிகள் ஒன்று கூடி இந்த நிகழ்ச்சிக்கான முன்கையை எடுத்து தொடர்ந்து செயலாற்றிவருகின்றனர்.அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். நாம் வேண்டுகின்ற நியாயமான பெண் தலைமை இங்குதான் தொடங்குகின்றது என்று நான் கருதுகிறேன்.அதற்காகவே இந்தப் போராட்டத்தில் அனைவரும் என்பதும் அவா. கோரிக்கையின் நியாயம் வலியுறுத்துகிற அவசியம் மிகவும் முக்கியமானது. நெடுங்காலம் அவதியுறுகிற மக்களின் பின்னால் நிற்பது<br />மனிதத்தன்மை. அதனடிப்படையிலும் இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.<br />நர்மதா நதிப்பிரச்சனையிலும் காஷ்மீர் பிரச்சனையிலும் அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்குறித்த பிரச்சனையிலும் தன்னுடைய கருத்தினை வலுவாக வைத்து ஒரு எழுத்தாளர் எவ்வளவுதான் புகழ் அடைந்திருந்தாலும் அதை தூக்கி தூரவைத்துவிட்டு துயரப்படும் மக்களுக்காக பாடு எடுக்கக்கூடிய பண்பு அருந்ததிராயின் ஆளுமையை வெளிபடுத்தியது. அவருடைய கருத்துக்களால் அப்பிரச்சனைகள் மீதான கவனத்தின் வெளிச்சம் மிக அதிகமாக குவிக்கப்பட்டது. அந்த வகைமையில் இப்போது ஈழத்தமிழ் மக்களுக்காக தமிழ் இலக்கிய படைப்பாளிகள் தங்கள் குரல்களை படைப்புகளின் வழியாக வெளிப்படுத்த ஒரு போராட்ட வடிவமாக கவன ஈர்ப்பின் குவிமையமாக அது அமைய இருக்கிறது இத்தகைய நிகழ்வுகள் தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்ல உலகளாவிய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வடிவமாக மாற இருக்கிறது. உலக தமிழர்களின் கவனத்தை<br />ஒரு புள்ளியில் மையப்படுத்தும் இந்நிகழ்வு தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்ல அரசியல் தளத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தலாம். இதற்கான முன் முயற்சியில் ஈடுபட்டுள்வ்ள தோழர்கள் ஒவ்வொருவரும் போற்றுதலுக்குரியோர்.போற்றுகிறோம்.</span></div>பறைhttp://www.blogger.com/profile/04875498042644893583noreply@blogger.com0