Wednesday, March 24, 2010

பெண்மொழியும் காவலும்

நன்றி : prajan
இலக்கியப் பிரதிகளை உருவாக்குபவர்கள் கடவுள்கள் அல்ல தவறுகளைச் செய்வதற்கும் அவற்றுக்கான காரணங்களை அடுக்குவதற்கும். தமிழிலக்கியப் பிரதிகளை கவனத்தில் கொள்வோமெனில் இன்னும் மானுடம் மனம் திறந்து பேசக்கூடிய எத்தனையோ செய்திகள அப்படியே இருக்கின்றன.

தலித் பிரச்சினைகளை பிரதிகளாக்கிய காலங்களிலும் அது தீவிர உச்சகட்டத்தை அடைந்த நேரத்திலும் தற்போது அது தேவையற்றதென கருதப் படும் காலத்திலும் இன்னும் காத்திரமாக பேசப்பட வேண்டியவை அப்படியேதான் இருக்கின்றன. கதைகளாக்கப் பட வேண்டிய தலித் வாழ்வுகளும் அதன் எதிர்பாராத தீவிரமும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. அதைவிட இன்னும் முக்கியமானது என்னவென்றால் தலித் எழுத்தாளர்களே அதன் தீவிரம் தற்போது தேவையற்றது என்று கூறும் சூழல்தான்.

இதே அளவுகோலை வைத்துக்கொண்டுதான் பெண் ஆக்கவாளிகளையும் நோக்க வேண்டியுள்ளது. புதிராக இருக்கின்றாள் பெண் என்னும் அங்கலாயிப்பில் புரியவில்லை பெண் என்று சொல்லி அவர்களைப் பூடகமாக வைத்திருந்த சமூக கோட்பாட்டு அரண்களை யெல்லாம் உடைத்து தன்னை பிரகடனப்படுத்தியது பெண்மொழி எழுத்து.

அது அப்படி தன்னை உடைத்துக் கொண்டு வெளிவந்தபோது எல்லாமே தகர்ந்துபோயின. எந்தெந்த உறுப்புகளை மையமாக வைத்து ஆண் ஆக்கங்கள் பெண்ணைப் பார்த்தனவோ அவை திறக்கப்பட்ட பாசறையிலிருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்களாக மாறின. அவை காற்றின் எல்லா திசைகளிலும் கல்ந்து பெரும் வீச்சுடன் நெருங்கின. அதிர்ந்த ஆண் ஆக்கங்கள் அவற்றை எதிர்த்தன. கூக்குரல்கள் எழுப்பின. ஆனால் அவற்றையெல்லாம் மீறி பெண்மொழி காலமாக மாறிவிட்டது. அதனை காலத்திலிருந்து யாரும் பிரிக்கமுடியாது.

ஆனால் லீனா மணிமேகலை என்னும் கவிஞரின் கவிதைகள் ஆபாசமாக இருக்கின்றன என்று இந்துத்துவ இயக்கங்கள் காவல் துறையிடம் புகார் கொடுத்திருக்கின்றது என்று ஒரு செய்தி அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி உண்மையாக இருக்கும் பாட்சத்தில் அதில் என்னவிதமான நியாயம் இருக்கின்றது என்று தெரியவில்லை. அதுவும் அது குறித்து கேள்விகள் கேட்கும் தாத்பரியங்கள் எதுவும் இந்துத்துவ அமைப்புகளுக்கு இல்லை.

இந்துக் கோவில்களில் உள்ள ஆபாசமான சிலைகள். இந்துக்கடவுளர்களின் ஆபாச புராணங்கள் இதெல்லாம் எப்படி நியாயப்படுத்தப்படுபவனாக இருக்கக் கூடும்.
எழுத்து என்பது அவருடைய உரிமை. அவரின் துன்பங்களை அவஸ்தைகளை எழுச்சியை எழுதுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. அப்படி இருக்கும்போது அது ஆபாசம் ஆபாசமில்லை நியாயத்தீர்ப்பு வழங்க யாருக்கும் உரிமை இல்லை.
எழுத்துதான் சமூகத்தை மாற்றி இருக்கின்றது. அதனால்தான் இந்துத்துவ இயக்கங்கள் இதை தூக்கிப் பிடிக்கின்றன. தீட்டு என ஒதுக்கி வைத்தவைகள் எல்லாம் பாடுபொருளாக மாறிவிட்டன. தடைகளைத் தகர்க்கின்றன. சமூகத்தினை கட்டுடைக்கின்றன. அதனால் தாங்கல் அமைத்துவைத்துள்ள சாதிய அடுக்குகள் சரிந்துவிடுகின்றன அதனால் தங்களின் வியாபாரம் நடக்கவில்லை என்பதுதான் அவர்களைன் இந்த எரிச்சலுக்குக் காரணம். கவலைப் படாதீர்கள் மதவாதிகளே நீங்கள் நினைக்கின்ற எதுவும் இங்கு நடக்காது. தீட்டு என்று நீங்கள் ஒதுக்கிவைத்தவர்கள் எல்லாம் எழுத்தை ஆயுதமாகத் தூக்கிவருகிறார்கள். உருட்டப்பட்ட உத்ராட்சைகளில் உலகை ஆளாலாம் என்ற கனவினை விட்டுவிடுங்கள் தீட்டுத்துணியென நீங்கள் சொன்ன அதுதான் புத்தகங்களாகவும் விடுதலைக்கான கருவியாகவும் பயன்பட வருகின்றன. ஒட்டுமொத்த விடுதலைக்காக பீ வாரிய கரண்டியும் கூடையும் செருப்புத்தைத்த ஊசிகளும் பேனாக்களாகிப் பேசுகின்றன. சேரிகள் பாசறைகளாகின்றன. பாடங்கள் ஊட்டப்படும்

4 comments:

Kavin Malar said...

சரியான நேரத்தில் அவசியமானதொரு பதிவு...நன்றியும் வாழ்த்துகளும் தோழர்!

சு.மு.அகமது said...

கூச்சலிடு
நான் செவிடன்

உன் உதட்டசைவை
உள் வாங்குகிறேன்
என்னுள் புதிதாய் துளிர்க்கிறது
உனக்கான புரிதல்கள்
கூடவே மென்மையின் வண்ணங்கள்.

சு.மு.அகமது.

(அம்ருதாவில் தமிழ்நதியின் கட்டுரையை
படித்த பின்பு எழுதியது.)

Siraju said...

லீனா மணிமேகலையைப் என்னுடைய பார்வை உங்கள் கருத்தின் மூலம் மாற்ற்ம் கொள்கிறது

Siraju said...

லீனா மணிமேகலையைப் என்னுடைய பார்வை உங்கள் கருத்தின் மூலம் மாற்ற்ம் கொள்கிறது