Saturday, August 29, 2009

அதுவும்

எதையும் உதிர்க்கும் மரம் உன் லாவகத்தை சொல்கிறது
அதனினும் இன்னும் சிறப்பு உனக்கான சிரிப்பு
நீயற்ற வெளியெனினும் அதில் உன்னை நிரப்புகிறாய்
தயக்கமில்லாத உன் இயல்பு காற்றாலானது
கடந்துசெல்லும் உனது வாசம் துரோகமற்றது
எதிரிக்குரிய பார்வையும் நட்புக்குரிய உன் பிரிதலும்
எதற்குள் நம்மை தீர்க்கும் என்னும்
நெடுநாளைய வழக்கிற்குள் ஏகாமல்
மரத்தைப் போல் பூவொன்றை உதிர்த்துவிட்டு போ கிளாடி
பூக்களில் உள்ள எறும்புகள் கடிக்கலாம் என்னை

No comments: