Wednesday, July 29, 2009

உன் கவிதை


ஆகையினால் நீங்கள் உங்களின்
கவிதைகளைப் படிக்காதிருங்கள்
எவ்வாறேனும் தளும்பி வழியும்
நீரைப் போல கவிதைகள் வந்துவிடலாம்
அஜாக்கிரதையாக இருந்தீர்கள் எனில்
உங்களைக் கொன்று வெளிவரும் கவிதை
அப்போது அது உங்களுடையது என உங்களாலும்
சொல்லமுடியாது போகலாம்
வேரைப் போல இருக்கும் அந்தக் கவிதை
உங்கள் கற்பாறைகளையும் ஊடுருவலாம்.

No comments: