Wednesday, March 10, 2010


அப்படி இன்னும் தெரியவில்லை யாருக்கும்
கடந்தவைகளின்மீதும்
நிகழ்பவைகளின்மீதும்
வினையாற்றும் விவரம்
கருமையின் இருப்பாயிருக்கும்
காலமேகம் பொழியும் மழையின் துயரம்
வேர்களை வேட்டையாடும் பொழுது எதுவாயினும்
அதில் நிகழும் மாற்றத்தின் குடியமர்ந்து
வாழும் குயிலின் பாடலைப் போல
அமைந்திருக்கும் வாழ்வு

No comments: